அரசியல் : வருகின்ற 2026 சட்டசபை தேர்தலை நோக்கி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த தேர்தல் பந்தயத்தில் பாமக மற்றும் தேமுதிக மற்றும் தவெக போன்ற கட்சிகள் எந்த பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் இருந்து வரும் நிலையில் பாஜக பாமக மற்றும் தேமுதிக இரு கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தான் பாமக பாஜக கூட்டணியுடன் இணைய போகிறது என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம் பாமக கட்சி திமுகவில் பாமக இணைந்தால் திருமாவளவன் என்ன நினைப்பார் என ராமதாசுக்கு சங்கடம் இருப்பதாக பேசப்படுகிறது என கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதில் அளித்த அவர், நாங்கள் அதுபோல யாருக்கும் நெருக்கடியாகவோ அல்லது இடையூறாகவோ இருக்க மாட்டோம். ஒருவேளை திமுகவுக்கும் பாமகவுக்கும் இடையே அப்படி ஒரு கூட்டணி நடந்தால் நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறி விடுவோம்.
அவர் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து நிற்போம் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை சந்திப்போம். எங்களுக்கு வெற்றி தோல்வி பற்றி கவலை இல்லை நாங்கள் எங்கள் கொள்கைக்காக களத்தில் இறங்கி போராடுவோம் இதைப் பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை எனவும் அவர் அடுத்த பேட்டியில் பதில் அளித்துள்ளார். தற்போது அவர் கூறிய இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.