மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில் முதற்கட்ட பணிகள் 7 மாதங்களுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வந்த நரேந்திர மோடி மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. மருத்துவமனை கட்டுவதற்கு நிதியை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசு போராட வேண்டிய நிலை இருந்தது.
4 ஆண்டுகளுக்கு மேல் எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருந்ததால் எதிர்க்கட்சிகள் செங்கலுடன் பிரச்சாரம் செய்து விமர்சித்து வந்தது. மதுரைக்கு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா , திமுக தலைவர் ஸ்டாலின் மீது சரமாரியான கேள்விகளை முன் வைத்ததால் பதிலடி கொடுக்கும் வகையில், மதுரைக்கு வந்த அமைச்சர் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை நிலைமையை பார்வையிட்டாரா? என்று பதிலடி கொடுத்தார்.
பின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகம் சார்பில் 3டி மாடல் வீடியோவை முதல்வரிடம் காண்பிக்கப்பட்டது. குடியிருப்புகள், விளையாட்டு வசதிகள், 750 இருக்கைகள் கொண்ட கலையரங்கம் மற்றும் மாணவர் விடுதிகள் ஆகியவை அமைக்கப்படுகின்றன. குறிப்பாக ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான தளம், நுழைவு வாயில் மற்றும் கார் பார்க்கிங் வசதிகள் ஆகியவை உருவாக்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் 2026 ஜனவரியில் முடிவு பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இதன் இரண்டாம் கட்ட பணிகள் 2027 முடிவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. மருத்துவமனையின் மூன்று பிரமாண்டமான கட்டிடங்கள் நிறைவடைந்து உள்ளது. மருத்துவ சிகிச்சை வளாகம், மருத்துவக் கல்லூரி வளாகம் மற்றும் நிர்வாக கட்டிடம் ஆகிய 3 கட்டிடங்களிலும் இதில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மருத்துவமனை மதுரையின் புதிய அடையாளமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.