டெல்லி: “தக் லைஃப்” தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற வருகின்ற நிலையில் வழக்கில் மகாத்மா காந்தி குறித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திரைப்படங்களுக்கு தணிக்கை குழு அனுமதி அளித்த பிறகு சட்டத்தின் ஆட்சி தான் மேலாக இருக்க வேண்டும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதை விட என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் திரைப்படத்தை பார்க்க வேண்டுமா? வேண்டாமா? என்பது மக்களின் முடிவு.
அதனால் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. நீதிபதி உஜ்ஜல் புயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு குழு கர்நாடக ஆட்சியை சீர்குலைக்கும் நபர்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று சித்தராமையாவுக்கு அரசு வரும் வியாழக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது நீதிமன்றம்.
மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திரைப்படங்களும் இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாவதை உறுதி செய்ய வேண்டும். சமீபத்தில் இம்ரான் பிரதாப்கர்ஹிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் ரத்து செய்ததை சுட்டிக்காட்டி உள்ளார் புயான். மராத்தி நாடகமான “மீ நாதுராம் கோட்சே போல் டோய்” என்ற நாடகத்தில் உள்ள காந்தியை பற்றிய சித்தரிப்புகளுக்கு மகாராஷ்டிரா மற்றும் கேரள அரசுகள் தடை செய்துள்ளது. மகாத்மா காந்தி மதிக்கப்படலாம். ஆனால் அவரைப் பற்றிய மக்களின் கருத்துக்களை தடுக்க முடியாது.
மும்பை உயர் நீதிமன்றம் தலையிட்டு பேச்சு சுதந்திர உரிமை நிலை நாட்ட படத்தை ரிலீஸ் செய்தது. இந்த வழக்கினை எடுத்துக்காட்டாக கொண்டு நடிகர் கருத்து கூறியதற்காக திரைப்பட தணிக்கை வாரியாக அங்கீகரிக்கப்பட்ட திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்த முடியாது. மேலும், நடிகர்கள் கமல்ஹாசன் மன்னிப்பு கூறவும் அல்லது வருத்தம் தெரிவிக்கவும் என்பது கட்டாயம் அல்ல என்றும், இந்த உரிமையானது தக் லைஃப் படத்திற்கும் பொருந்தும் என்று நீதிபதி புயான் தெரிவித்துள்ளார்.