வாஷிங்டன்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் பெரிதாக சேதம் அடையவில்லை. ஆனால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவும் வகையில் களம் இறங்கினால் மொத்தத்தையும் அழித்துவிடும். பங்கர் பஸ்டர் என்ற ஆயுதத்தை வைத்து ஈரானை மொத்தமாக காலி செய்ய முடிவெடுத்துள்ளது. GBU-57 (massive ordinance penetrator) ( MOP) என்று அழைக்கப்படும் குண்டுகள் தான் இந்த வேலையை சரியாக செய்து முடிக்கும். குறிப்பாக நிலத்திற்கு அடியில் உள்ள பதுங்கு குழிகளை அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட குண்டுகள் ஆகும். இந்த குண்டுகளை அனைத்து விமானங்களிலும் பயன்படுத்த முடியாது.
இதற்கென தனியாக வடிவமைக்கப்பட்ட B 2 spirit stealth bombers விமானங்களில் மட்டும் பயன்படுத்த முடியும். ரேடார்களில் சிக்காமல் எதிரி நாட்டுக்குள் புகுந்து திரும்பி வரும் திறன் உடையது. மேலும், GBU-57 குண்டுகள் ஜிபிஎஸ் உடைய உதவியுடன் இலக்குகளை தாக்கும். குறிப்பாக 2 டன் TNT வெடிபொருள் ஏற்படுத்தும் பாதிப்பை போன்ற GBU-57 குண்டுகள் பாதிப்பை ஏற்படுத்தும் .
இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்கா களம் இறங்காத போதிலும் இந்த GBU-57 ஆயுதத்தை பயன்படுத்துவதன் மூலம் களத்தில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பூஸ்ட் ஸ்டேஜ், மிட் கோர்ஸ் ஸ்டேஜ் மற்றும் டெர்மினல் ஸ்டேஜ் என மூன்று கட்டங்களாக செயல்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன் அமெரிக்கா எந்த தாக்குதலிலும் GBU-57 என்று ஆயுதத்தை பயன்படுத்தியதாக ஆதாரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மலைகளுக்கு உள்ளே இருந்தாலும் ஈரானின் அணுசக்தி மையங்களை துல்லியமாக அழிக்கும். 10 மாடி கட்டிடத்தின் மீது இருந்து போட்டாலும் தரை தளம் வரை ஊடுருவி சென்று பின் வெடிக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. ஈரானின் அணுசக்தி மையங்களை சேதப்படுத்தி கதிர்வீச்சு கசிவை தூண்டி எதிரி நாட்டை நிலைகுலைய செய்யும் என்று கூறப்படுகிறது.