கான்பூர்: கடந்த ஐந்து மாதங்களாக ஓயோ ரூம்கள் தவறான முறையில் பயன்படுத்துவதாக தொடர்ந்த புகாரின் மூலம் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. புதிய விதிமுறைகளின்படி ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமை ஆகியவற்றை மட்டுமே அடையாளமாகக் கொண்டு அறையில் தங்க அனுமதிக்கப்படும். மேலும், செக்கிங் செய்யும் போது முன்பதிவு செய்யும் ஜோடிகளின் உறவின் ஆதாரத்தை வழங்க வேண்டும் போன்ற புதிய விதிமுறைகளை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் ஓயோ ஹோட்டலில் நடந்துள்ளது. உத்திர பிரதேசம் மாநிலம், பாக்பத் மாவட்டத்திலுள்ள பராத் என்ற பகுதியில் இயங்கி வரும் ஓயோ ஹோட்டலில் திருமணமான பெண் தனது காதலனுடன் அறை எடுத்து தங்கியுள்ளனர்.இது தெரிந்த கணவன் ஆத்திரமடைந்து தன்னுடைய தாயையும் அழைத்து போலீசுக்கு சென்றுள்ளார். அப்போது மனைவி இன்னொருவருடன் ஓயோ ஓட்டலில் தங்கி இருப்பது தெரியவந்தது.
கணவன் மாமியார் மற்றும் போலீசார் ஆகியோர் ஹோட்டல் ரூமுக்கு வந்து விட்டனர். இதை எதிர்பார்க்காத பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அதன்படி ஓட்டலின் பின்புற ஜன்னல் வழியாக அதாவது 12 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதை குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தனது போனில் வீடியோ எடுத்துள்ளார். அப்பெண்ணின் மாமியார் சோசியல் மீடியாவில் பதிவிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விசாரித்த போது கடந்த 2019ல் ககோர கிராமத்தை சேர்ந்த நபருடன் திருமணம் நடந்து ஒரு மகன் இருப்பது தெரியவந்தது.
திருமணத்திற்கு முன்பு மனைவி பல பேருடன் உறவு வைத்து இருந்ததாகவும், கணவர் பலமுறை கண்டித்தும் உள்ளார். சம்பவத்தன்று தன் மனைவியை பைக்கில் வேறு ஒருவருடன் நேரடியாக பார்த்து அவரைப் பின்தொடர்ந்ததாக கூறப்படுகிறது. ஹோட்டலில் இவர்கள் நுழைந்ததை பார்த்த அந்தப் பெண் ஹோட்டல் பின்பக்கத்தில் இருந்து குதித்து தப்பி விட்டதாக கூறியுள்ளார். மேலும் கள்ளக் காதலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.