டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசி வந்தாலும் நேரடியாக களத்தில் இறங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளர் லிவிட் செய்தியாளர்களிடம் பேசிய போது, “2 வாரங்களில் ஈரானைத் தாக்குவதற்கான முடிவை எடுப்பார்” என்று கூறியிருந்தார். ஈரான் மலையில் அணு சக்தி மையத்தை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை சாதாரண குண்டுகளால் அளித்து விட முடியாது. மேலும், அமெரிக்காவிடம் இருக்கும் குண்டுகள் மட்டுமே ஈரான் அணுசக்தி மையத்தை முழுமையாக காலி செய்ய முடியும் என்று திட்டம் போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் “பங்கர் பாஸ்டர்” குண்டுகளால் மட்டுமே ஈரானின் அணுசக்தி மையத்தை முழுமையாக அழிக்க முடியும் என்று நம்புகிறது அதன்படி பங்கர் பஸ்டர் 30,000 பவுண்ட் எடையுடன் வெடிப்பதற்கு முன்பாக ஆழத்திற்கு நுழைந்து பின் ஜிபிஎஸ் சிக்னலின் உதவியால் வெடிக்கும் திறன் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் வடகொரியா போன்ற இடங்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது என கூறியுள்ளார். மேலும், வீசப்பட்ட குண்டு ஆழமாக சென்று சில சேதங்களை ஏற்படுத்தும். ஆனால் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை பங்கர் பாஸ்கர் குண்டுகளை எந்த போரிலும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விமானங்கள் மிசோரில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்தில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்தி ஊடகமான ஏ பி சி யில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டீவ் கன்யார்ட், “ஈரானை அடைவதற்காக சுமார் 15 மணி நேரம் தேவைப்படும் என்றும், ஈரானின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பின் பெரும்பகுதியை அழித்துவிட்டால் ரகசியமாக இருக்கும்” என்றும் கூறியுள்ளார்.
தரையில் ஊடுருவி சில சேதங்களை ஏற்படுத்தும். இதனால் அமெரிக்க அதிபர் முடிவைத் தள்ளி வைத்திருக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் ஈரான் அணுசக்தி அமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.