சென்னை: நாகையிலிருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக புகார்கள் சென்றது. புகாரின் பேரில் திமுக முக்கிய பள்ளியின் பின்னணி குறித்து என் சி பி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். என் சி பி எனப்படும் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், கடந்த 2023 ஆம் ஆண்டு புதுடில்லியில் சோதனை நடத்தினர். தொடர் விசாரணையின் போது போதைப்பொருள் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணிக்கு அருகே விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. கடத்தப்பட்டவர் மகாலிங்கம் என்பது விசாரணையில் தெரிந்தது.
இவர் திமுகவில் முக்கிய புள்ளி என்பதும் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பது விசாரணையில் தெரிந்தது. டெல்லியைச் சேர்ந்த என் சி பி அதிகாரிகள் மகாலிங்கத்தின் வீட்டில் சோதனை செய்தனர். ஏற்கனவே கஞ்சா கடத்தல் வழக்கில் விழுந்தமாவடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கத்தை நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரில் கடந்தாணடு கைது செய்யப்பட்டது தெரியவந்தது. மகாலிங்கத்தின் மகனும் ஊராட்சி மன்ற ஒன்றிய கவுன்சிலருமான அலெக்ஸ்-ஐ தேடும் பணியில் இறங்கினர்.
இருவரும் சுயேட்சையாக வெற்றி பெற்றவர்கள் என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் சில நிபந்தனைகளுடன் மகாலிங்கத்திற்கும் அவரது மகன் அலெக்ஸுககும் ஜாமின் வழங்கியது. ஏப்ரல் மாதத்தில் அலெக்ஸ் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டது. மகாலிங்கம் மகனின் தூண்டுதலில் கூட்டாளிகள் இலங்கைக்கு போதை பொருளை கடத்துவதாக அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. தந்தை மற்றும் மகன் ஆகியோரை இயக்குவது யார்? இவர்களின் பின்னணியில் யார் உள்ளார்? என்பதை குறித்து என்சிபி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அதிகாரிகள் கூறியதிலிருந்து மகாலிங்கம் மற்றும் அலெக்ஸ் ஆகியோருக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்புள்ளதாக புகார்கள் வந்ததன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடக்கிறது என்று அவர்கள் கூறினார். மேலும் மகாலிங்கத்தை போதைப்பொருள் கடத்தல் மன்னன் என்று விழுந்தமாவடி மக்கள் அழைக்கின்றனர் என்ற செய்தியும் கிடைத்தது.