படிப்புக்கு வயது தடையில்லை!! ஒரே சமயத்தில் தேர்வு எழுதிய தந்தை மற்றும் மகன்!! 

Age is no barrier to study!!
உத்தர பிரதேசம்: உத்தர பிரதேச மாநிலம், மீரட் அருகில் உள்ள உதயராம்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த யஷ்பால் சிங் 41 வயது மற்றும் அவரது மகன் சேகர்(21) இருவரும் போலீசில் இணைவதற்காக படித்து வந்தனர். ஒரே சமயத்தில் தேர்வு எழுதி தந்தை மற்றும் மகன் போலீஸ் வேலைக்கு தேர்வாகியுள்ளது பாராட்டுவதற்குரியது. யஷ்பால் கடந்த 2019 ஆம் ஆண்டில் ராணுவத்திலிருந்து விருப்பமாக ஓய்வு பெற்று வீட்டில் இருந்துள்ளார். இவரது மகன் சேகர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தனது 18 வயதில் போலீஸ் வேலையில் சேர ஆசைப்பட்டு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அதற்காக மகனுக்கு தந்தை உதவ ஆரம்பித்து பின் போலீஸ் வேலைக்கு தயாராவதாக முடிவு எடுத்துள்ளார். டெல்லியில் உள்ள பயிற்சி அகாடமியில் சேர்ந்து இருவரும் படித்தனர். வினாத்தாள்களை கொண்டு இருவரும் பயிற்சி எடுப்பது மற்றும் பொது அறிவு தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வது என படித்தனர்.
இதுகுறித்து சேகர் கூறியதாவது, தந்தையுடன் ஆரம்பத்தில் ஆன்லைன் வகுப்பில் கற்றுக்கொள்ள எனக்கு சங்கடமாக இருந்தது பின் பழகி விட்டது. உள்ளூர் நூலகத்திற்கு சென்று வருவோம், காலையில் 10 மணிக்கு சென்றால் மாலை 4 மணிக்கு தான் வருவோம். சிறிது உணவு இடைவேளை மற்றும் காலை நேரத்தில் உடற்பயிற்சி என சேர்ந்தே செய்வோம். இரண்டு மாதத்தில் தேர்வு நடந்தது அதில் கலந்து கொண்டு நன்றாக தேர்வு எழுதினோம்.
மேலும், போலீஸ் நியமன ஆணையர் மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் சேர்ந்து நியமன ஆணையை வழங்கினார்கள். இருவரும் ஒன்றாக சேர்ந்து படித்து தேர்வெழுதி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இருவருக்கும் வேறு வேறு இடத்தில் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், சேகர் பயிற்சிக்காக பரேலி செல்ல இருக்கிறார். அவரது தந்தை யஷ்பால் பயிற்சிக்காக ஷாஜகான்பூர் செல்ல இருக்கிறார். போலீஸ் வேலைக்கு தேர்வான தந்தை மற்றும் மகன் ஆகியோருக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram