மத்திய அரசுப் பணிகளுக்கான UPSC முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்கள் இப்போது ஒரு நல்ல செய்தியை கொண்டாடலாம். அவர்களின் முதன்மைத் தேர்வுக்கான வெற்றியை ஊக்குவிக்க, தமிழக அரசு ரூ.25,000 ஊக்கத்தொகையை வழங்கவுள்ளது.
இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், ஜூன் 21 முதல் ஜூலை 2 வரை https://portal.naanmudhalvan.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகை திட்டம், 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “நான் முதல்வன்” என்ற பிரமாண்டத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். துணை முதலமைச்சரால் தொடங்கப்பட்ட இந்தப் பிரிவு, தமிழக இளைஞர்களை மத்திய அரசுப் பணிகளை நோக்கி வழிநடத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், ஏற்கனவே, மாதம் ரூ.7500 வழங்கப்பட்டு வருகின்றது (10 மாதங்களுக்கு) தேர்வு செய்யப்படும் ஆயிரம் மாணவர்கள் பயிற்சிக்கு உதவிகள் பெறுகின்றனர்.
இந்த வருடம் வெற்றிபெற்றவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வழங்கப்படும்.மாணவர்கள் தங்களது தேர்ச்சி சான்றிதழ் மற்றும் தேவையான விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றி, இந்த உதவியை பெறலாம். இந்த வாய்ப்பு மூலம், தனியார் பயிற்சி மையங்களை நம்பாமல், அரசு உதவியுடன் மாணவர்கள் தங்கள் கனவை நிஜமாக்க முடியும். இது ஒருவரின் பயணத்தில் நிதி ஒரு தடையாக மாறாமல் இருப்பதற்கான உதவியாகும். இந்த வகை திட்டங்கள் தமிழக இளைஞர்களுக்கான எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் கருவியாக அமையும். அரசு எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டத்தக்கது. யூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.