2026 தேர்தலுக்கான பரிசு!!எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

Gift for DMK 2026 election

கோவை: கோவை விமான நிலையத்தில் அதிமுக செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது, கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி நானும்,முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் ஏற்கனவே தெளிவான விளக்கத்தை கொடுத்து விட்டோம். கீழடி ஆராய்ச்சிக்கான எடுத்த நடவடிக்கைகள் பற்றி தெளிவான விளக்கம் அளித்து விட்டோம். மேலும், கடவுள்களை வழிபடுவது அவரவர் அமைப்பின் விருப்பம் என்பது ஜனநாயக உரிமை.

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதற்காக என்னுடைய வாழ்த்துக்கள். “ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட காலம் விரைவில் வரும்” என அமித்ஷா கூறி இருப்பது அவரின் தனிப்பட்ட கருத்து. அதேபோன்று அனைவருக்கும் தாய் மொழி தான் முக்கியம் என்பது போன்ற கருத்துக்களை கூறியுள்ளார். மேலும், திமுக மீது மக்கள் கொந்தளிப்பாக இருக்கிறார்கள்.

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருவதால் தமிழக மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதன் மறைப்பதற்கே கேலிச்சித்திரங்கள் மற்றும் அவதூறு தகவல்களை பரப்புவது போன்ற செயல்களை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதற்கு எல்லாம் வரும் 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தண்டனையை அவர்களுக்கு பரிசாக வழங்கப் போகிறார்கள் என்று திமுக குறித்து கண்டனம் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் ஆந்திராவில் நடத்தவிருக்கும் யோகா தின நிகழ்ச்சியை தலைமை தாங்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். அமித்ஷா கூறுகையில் தாய் “மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்” என்கின்ற அர்த்தத்தில் பேசியதாக நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram