ஈரான் இஸ்ரேல் இடையிலான ஓர் தீவிரமடைந்த நிலையில் மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தால் வான்வழி தொடங்கல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளுக்கு இடையே போர் நிலவுவதால் அமெரிக்க உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளுக்கு சென்னையிலிருந்து செல்லவிருக்கும் 11 விதமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
அணு ஆயுதம் தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதாக ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் விமான மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியது. ஈரான் பதிலடி தாக்குதல் இஸ்ரேல் மீது நடத்தியது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க நேற்று தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி மையங்களை 30 ஆயிரத்து பங்கர் பஸ்ட் குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா அறிவித்தது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் மேலும் அதிகரித்த நிலையில் வான்வழி தொடங்கல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானங்கள் அனைத்தும் புறப்பட்ட இடத்திற்கு திரும்பும் 6 ஏர் இந்தியா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. துபாய் நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது.
இதனால் வளைகுடா நாடுகளுக்கு ஸ்பைஸ் ஜெட் விமான சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளும் வானொலி தடங்களை மூடியுள்ளது. சென்னையில் இருந்து மத்திய கிழக்கு பகுதிகளுக்கு செல்லக்கூடிய 11 விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தோகா, அபுதாபி, துபாய் மற்றும் குவைத் உள்ளிட்ட ஆறு புறப்பாடு விமானங்கள் மற்றும் ஐந்து வருகை தரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தாய்நாட்டில் இருந்து தோகா சென்று கொண்டிருந்த மூன்று ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் கோர்ப்பதற்கு தான் செல்ல முடியாமல் சென்னையில் தரை இறங்கி உள்ளது.