வாஷிங்டன்: ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளார் டிரம்ப். மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது, ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என்றும் இந்த வரை அமைதியாக அனைத்தும் முடிவதை நான் எதிர்பார்க்கிறேன் என்றும், ஆட்சி மாற்றம் என்பது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும் என்றும், இதனால் ஏற்படும் குழப்பங்களை என்னால் பார்க்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் ரூத் சமூக வலைதள பக்கத்தில் ஆட்சி மாற்றம் என்பது வார்த்தையை பயன்படுத்துவது மட்டுமல்லாது அரசியல் ரீதியாக சரியானதாக இருக்காது என்று கூறியுள்ளார். மேலும் தற்போதைய ஈரானின் ஆட்சியாளர் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை எனில் ஆட்சி மாற்றம் ஏன் ஏற்படக் கூடாது என்றும் அதிபர் ப்ரம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அணுகுண்டுகளை தயாரிக்கும் ஈரானையே கட்டுக்குள் வைக்க இஸ்ரேல் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி இஸ்ரேல் போர் விமானங்களை கொண்டு திடீர் தாக்குதல் நடத்தியது. இது அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்ட நிலையில் கடந்த 22ஆம் தேதி அமெரிக்க களமிறங்கிய போது ஈரானின் போர்ட்டோ, நடான்ஸ் போன்ற முக்கிய அணுசக்தி நிலையங்களை தகர்க்கப்பட்டது.
இதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் நள்ளிரவில் கத்தார் நாட்டின் தலைநகர் தோகோவில் 19 ஏவுகணைகளைக் கொண்டு விமானப்படை தளத்தை தாக்கியது ஈரான். போர் விமானப்படைத்தளத்தில் 11 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.
ஈரானின் தலைநகரம் டெக்ரான் உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் தலைவர்களுடன் கத்தார் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சு வார்த்தையானது சுமூகமாக உடன்பாடு எழுந்ததாக கூறப்படுகிறது. ஈரான் இஸ்ரேலுக்கு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.