தளபதி விஜய் அவர்களின் கடைசி திரைப்படம் ஜனநாயகன் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. படம் எடிட்டிங் ஒர்க் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பேஸ்மெண்ட் ஸ்ட்ராங் செய்து சட்டமன்ற தேர்தலில் களம் காண வேண்டும் என்ற முடிவோடு அடுத்தடுத்த காயினை மிக அமைதியாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களின் வாயிலாக மூவ் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரது சுற்றுப்பயணம் குறித்து சமீபத்தில் பேச்சு அடிபட்டு வந்தது. இன்னும் ஒன்பது மாதங்களே சட்டமன்றத் தேர்தலுக்கு இருப்பதால் அடுத்தடுத்த களப்பணிகளை மிக அமைதியாக நடத்தி வருகிறார். சமீபத்தில் அவர் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா நடத்தி இருந்தார். இந்நிலையில் பலரும் எதிர்பார்த்து இருந்த அவரின் சுற்றுப்பயணம் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க உள்ளதாக அவரது கட்சி அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிவித்துள்ளது. விஜய் குறித்த அரசியல் தகவல் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் உலா வந்து வருகின்றன. மேலும் அவரின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இடையில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து தொண்டர்களை உற்சாகப்படுத்துமாறு பேசி இருந்தார். அதைத்தொடர்ந்து அவரின் செயல்பாடுகள் மிக நுண்ணியதாகவும், பின்னின்று வழி நடத்தும் தலைமை வகித்ததாகவும் அமைகின்றது என்று தெளிவாக தெரிகிறது.