3 உளவாளிகளை தூக்கிலிட்ட ஈரான்!! போர் முடிந்த அடுத்த நாளே ஆக்சனில்  இறங்கியது!! 

Iran executes 3 spies
டெஹ்ரான்: ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் தற்போது முடிவுக்கு வந்த நிலையில் ஈரான் நாட்டின் அரசியலிலும் பல்வேறு மொசாட் உளவாளிகள் ஊருடையதாக தகவல் கிடைத்துள்ளதாக அறிவித்தது ஈரான். அதன்படி சமீபத்தில் நடந்த மோதலில் ஈரானின் முக்கிய தலைவர்கள் இஸ்ரேலால் துல்லியமாக கொள்ள முடிந்தது என  கூறப்படுகிறது. இஸ்ரேலில் உளவாளிகள் என 3 பேரை ஈரான் அரசு தூக்கிலிடப்பட்ட உள்ளது.
இரு நாடுகளுக்கும் இருந்து கடந்த 10 நாட்களுக்கு மேல் தாக்குதல் தொடர்ந்தது. நேற்று போர் முடிவுக்கு வந்த நிலையில் போர் மூண்டுள்ளது. அமெரிக்கா களத்தில் இறங்கி ஈரானின் முக்கிய அணு உலைகளை தாக்கியதற்கு ஈரான் பதிலளிக்கும் விதத்தில் கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே மூன்று பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் மொசாட் அமைப்பிற்காக மூன்று பேரும் உளவு பார்த்ததாக ஈரான் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் நிசான் செய்தி நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அமெரிக்கா தலையிட்டதால் போர் முடிவுக்கு வந்துள்ளது.  முடிவுக்கு வந்த அடுத்த நாளே இஸ்ரேலின் மொசாட் அமைப்பிற்கு பணியாற்றியதாக 3 பேரை கண்டு பிடித்துள்ளது. ஈரான் நாட்டின் முக்கிய தலைவர்கள் கொலை செய்வதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை கடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேலுடன் தொடர்பு இருப்பதாக இதுவரை 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என நூர் நியூஸ் தெரிவித்துள்ளது.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram