இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது என்பது சவாலாக இருந்தது . இந்தியா மட்டுமல்லாது தெற்காசிய நாடுகளும் இருக்கிறது. 2023 ல் நாடு முழுவதும் லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்ததாக லான்சென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 1980 களில் இருந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். கோவிட் 19 பெருந்தொற்றுக்குப் பிறகு உலகம் முழுவதுமே தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது என்பது சரிந்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த சரிவானது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது. தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவில் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளும் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. உலகளாவிய சுமை தரவு 2023 அடிப்படையில் 1980 முதல் 2023 வரை தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன என்பதை ஆராய்ந்து வந்தனர். தட்டம்மை, போலியோ, டிப்தீரியா, நிமோனியா, காசநோய் மற்றும் ரோட்டா வைரஸ் ஆகியவைகளுக்கு எதிராக 11 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1974 இல் இருந்து 15.4 கோடி குழந்தைகளின் உயிர்கள் தடுப்பூசிகளின் மூலம் காக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார மையம் கூறுகிறது. “ஜீரோ டோஸ்” குழந்தைகளின் எண்ணிக்கை உலக அளவில் 75% என குறைக்கப்பட்டுள்ளது. 2021 இல் இருந்து உலகளாவியல் 1.86 குழந்தைகள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை என்ற நிலை தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2023 இல் உலகம் முழுவதும் குழந்தைகளின் எண்ணிக்கை 15.7 கோடியாக உயர்ந்துள்ளது. நைஜீரியா முதலிடத்தில் உள்ள நிலையில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் 14.4 லட்சம் குழந்தைகள் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளாமல் உள்ளனர். குறைவாக ஒதுக்கப்பட்ட இடங்களில் சேவையை ஆற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்ட நிலையில் பல லட்சக்கணக்கான குழந்தைகளின் உயிர்கள் அபாயத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்று எச்சரித்துள்ளனர் நிபுணர்கள்.