மும்பை: 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய துறையில் இருந்து நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டோருக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது. 15.3.2026 இல் 98 வது ஆஸ்கர் விருது விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி உலகளவில் திரைத்துறையில் சிறப்பாக தனது திறமைகளை பயன்படுத்தி பங்காற்றிய 534 கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நடிகை கரண் மாலி, ஆடை வடிவமைப்பாளர் மாசிமா பாசு, திரைப்பட இயக்குனர் பாயல் கபாடியா, ஒளிப்பதிவாளர் ரன்வீர் தாஸ் மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா ஆகியோருக்கும் பாஸ்கர் விருது அகாடமி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
98 வது ஆஸ்கர் விருது விழாவானது மார்ச் 15ஆம் தேதி லாஸ்ட் ஏஞ்சல்ஸில் உள்ள தனியார் டால்பி தியேட்டரில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கோனன் ஓ பிரையன் தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது. மேலும், விழாவிற்கான விருது பரிந்துரைகள் ஜனவரி 22 ஆம் தேதியில் வெளியாகும் என அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய உறுப்பினர் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த உறுப்பினர்களாக இணைய கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா, செபாஸ்டியன் ஸ்டான், ஜெர்மியஸ் ஸ்ட்ராங், அரியானா கிராண்டே உள்ளிட்ட 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைக்கப்பட்டவர்கள் இணைந்தால் ஆஸ்கர் அகாடமி இன் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 11,120 ஆக அதிகரிக்கும். மேலும் வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10,143 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.