பாலியல் தொல்லை கொடுத்த தந்தை!! உடல் நலம் பாதிக்கப்பட்ட மகள்கள்!! திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள்!! 

Father who sexually harassed
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பளி மாவட்டம் சர்தார் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மற்றும் தனது இரண்டு பெண் குழந்தைகளோடு வாழ்ந்து வந்தனர். கொடூர தந்தையால் 5 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.18 வயதிற்கு உட்பட்ட மகள்கள் உடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இரு மகள்களுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதித்தார்.
சிறுமிகளை பரிசோதனை செய்வதற்காக மருத்துவர் தாயாரிடம் விசாரித்துள்ளார். விசாரித்த போது சிறுமிகளின் தந்தை பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் கொடூர தந்தை. பாலியல் தொல்லை குறித்து தாயாருக்கு தெரிய வந்ததும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும், புகார் அளிக்காமல் கணவனுக்கு துணையாக இருந்துள்ளார்.
இதனை அடுத்து சிறுமிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தொண்டு அமைப்பின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர் போலீசார். மேலும் வழக்கு குறித்து தாயாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது தனது கணவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டு உள்ளார் அந்தப் பெண். உடனடியாக வழக்கு பதிவு செய்த போலீசார் மகள்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த கொடூர தந்தையை கைது செய்தனர். தந்தையிடம் விசாரணை முடிந்து சிறையில் அடைத்தனர் போலீசார். தந்தையே மகள்களை பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram