மதுரை: பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர். தமிழகத்தில் தினம் தோறும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றன. கூட்ட நெரிசலால் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இது உயிருக்கே ஆபத்தாக முடியும் என மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் காலகட்டத்தில் மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டு நின்று வருவது வாடிக்கையாக வைத்துள்ளனர். பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கண்டித்தும் மாணவர்கள் கேட்காமல் வாக்குவாதம் செய்கின்றன.
1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பேருந்துகளில் கூட்டம் அதிகரிக்கிறது. இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தீர்வு காண்பதற்காக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கானது நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வு குழுவின் கீழ் விசாரணைக்கு வந்தது.
சமீப காலத்தில் புகை மற்றும் போதை பழக்க மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. பெற்றோர் அறிவுரை வழங்கி பிள்ளைகளை வளர்க்க வேண்டும். காவல்துறை பாதுகாப்பு வழங்குவது என்பது பள்ளிகள் வரை வந்துவிட்டது. படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யும் மாணவர்களின மீது எழுந்து குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல்துறையினர் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று மாணவர்கள் பேருந்து போல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.