இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா ஸ்ருதியிடம் நக்கலாக சீதாவில் மாப்பிள்ளை பார்த்ததாகவும், மாப்பிள்ளை வீட்டார் சீதா லவ் பண்ணுவதை சொல்லி ஓடி விட்டதாகவும் கூறுகிறார். இதனைக் கேட்டு கடுப்பாகும் முத்து நான் அவளுக்கு நல்ல மாப்பிள்ளை பார்ப்பேன் என்று கத்துகிறார். அவளுக்கு பிடிக்காது மாப்பிள்ளை பார்த்து என்ன பிரயோஜனம் புடிச்ச மாப்பிள்ளை எல்லாம் பாக்கணும் என்று சொல்ல, சீதாவை முத்து நேரில் சந்தித்து உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு அவள் கவர்ன்மென்ட் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று சொல்லுகிறார். மாப்பிள்ளை ஒரு பையனா இருக்கணும்னு நினைக்கிறியா பேமிலியா இருக்கணும்னு நினைக்கிறியா என்று கேட்க, ஒரு பையனா இருக்கனும் மாமா என்று அருணை நினைத்து சொல்லுகிறார். சரி விடு அதே மாதிரி உனக்கு மாப்பிள்ளை வீடு பார்க்கிறேன் என்று கிளம்பி விடுகிறார் முத்து.
அடுத்த நிமிடம் மீனாவிடமிருந்து சீதாவிற்கு ஃபோன் வருகிறது. அவள் நடந்ததை எடுத்துக் கூறி விட்டு, அம்மாவிடம் நான் எதையும் மறைத்ததில்லை. கல்யாணம் ஆனத சொல்லிறேன் அக்கா என்று கேட்க, மீனா அதெல்லாம் ஒன்னும் வேணாம் இப்ப சொன்னா பெரிய பிரச்சனை ஆயிடும் என்று போனை வைத்து விடுகிறார். வீட்டிற்கு வந்த முத்து மீனாவிடம் நான் சீதாவிற்கு பிடித்த மாதிரி மாப்பிள்ளை பார்க்க போறேன் என்று கூற, சீதா என்ன சொன்னா என்று விலாவாரியாக கேட்டு, அதன் பின் அவள் அருணை மனதில் வைத்து தான் சொல்லியிருக்கிறாள் என்கிறார். இதனால் மீண்டும் கடுப்பாகும் முத்து அவன் ஒருத்தன் தான் கவர்மெண்ட் வேலை பார்க்கிறானா? என்று சொல்ல அவள் மனதில் அவர்தான் உள்ளார் என்றவுடன் நீ வா நம்ம நேரா போய் அவளிடம் கேட்போம் என்று இருவரும் கிளம்புகின்றனர்.
ரோகினி என்ன வேண்டுமென்றாலும் செய்வாள் போல, பணம் கேட்பதற்காக ஸ்ருதியின் அம்மா வீட்டிற்கு வருகிறாள். அதற்கு முன்னரே இந்த, ரெஸ்டாரன்ட் விஷயத்துல நம்ம மாப்பிள்ளையை கூட்டிட்டு வரலாம்னு நினைச்சால் உன் பொண்ணு சரி இல்ல என்று ஸ்ருதி அம்மா அப்பா பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்நேரம் அங்கு வந்த ரோகினி ஆன்ட்டியை தனியே அழைத்து ரூமில் கூட்டி சென்று எனக்கு இந்த மாதிரி 2 லட்சம் வேண்டும் என்று கூறுகிறாள். இருமா பண விஷயமா நான் அவர்கிட்ட கேட்டு வரேன் என்று வெளியே வந்து விடுகிறார். வெளியே வந்த ஸ்ருதி அம்மா, அந்த பொண்ணு பணம் கேட்டு வந்து இருக்கு என்று கூறுகிறார். நான் என்ன பைனான்ஸ்னு பண்ணுமா நடத்துறேன் வரவுங்க, போறவங்களுக்கு எல்லாம் காசு கொடுக்க என்று கத்தி இல்லை என்று சொல்லிவிடு என்று கூறுகிறார். அப்புறம் கனம் நிமிடத்தில் நில்லு அந்த பெண்ணிடம் காசு கொடு என்று கூற, எதற்கு இவளுக்கு காசு கொடுக்கணும் என்று கேட்கிறார். நம்மளுக்கு சப்போர்ட் செய்ய அந்த வீட்டுக்குள் ஒரு ஆள் வேணும் என்று அதிரடி பிளான் தீட்டுகிறார்.
பணத்தை ஜிபே பண்ணுவதாக ரோகினியிடம் புதிய நம்ம கூற வெளியே வந்த ரோகினி தேங்க்யூ அங்கிள் என்று கூறுகிறார். இருக்கட்டுமா எங்களுக்கு ஒரு உதவி என்றால் நீ பண்ணாமையா போய்டுவ என்று சொல்ல அதெல்லாம் நான் பண்ணுவேன் அங்கிள் என்று சொல்லிவிட்டு செல்கிறார். மீனாவின் அம்மா வீட்டில் லேட் ஆக வரும் சீதாவை பார்த்து ஏன் லேட்டு என்று அம்மா கேட்க, ஹாஸ்பிடல்ல வேலை நிறைய இருந்தது என்று கூறுகிறார். வேற யாரையும் பார்க்க போகல என்று கேட்க, அருணை பாக்க போகலையா என்று நேரா கேளு நான் ஹாஸ்பிடல் தான் இருந்தேன். வேணும்னா மாமா கிட்ட கேட்டுக்கோ என்று சொல்லி விடுகிறார். அவர் ஏன் அங்க வந்தாரு என்று கேட்க மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்று என்னிடம் கேட்க வந்தார் என்று கூறுகிறார். உடனே சத்யாவும் ஆமாமா ஏதோ செங்கல்பட்டுக்கு மாப்பிள்ளை பார்க்க போனோம்னு என்னை கூப்பிட்டார் மாமா என்று சொல்கிறார். அந்நேரத்தில், மீனாவை அழைத்து கொண்டு அவளது அம்மா வீட்டிற்கு வருகிறார் முத்து. முத்தூட் சீதாவை பார்த்து நீ அருணை மனதில் வைத்துக் கொண்டுதான் மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும் என்று சொன்னியா என்று கேட்க, அவர் சிறிது தயங்கிவிட்டு ஆமா மாமா என்று சொல்லுகிறார். இதனால் மீண்டும் முத்து கோபமடைய, சீதாவை போட்டு வெளுத்து வாங்குகிறார் சந்திரா. இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.