8 கிலோமீட்டர்க்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்!! 32 மணி நேரம் நீடிப்பு!! 3 பேர் பலி!!

Vehicles lined up for 8 kilometers!!
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் 32 மணி நேரமாக நீடித்த போக்குவரத்து நெரிசலானது 8 கிலோ மீட்டர் வரை ஏற்பட்டது. இந்தூர் தேவாஸ் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட 32 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் 3 பேர் பலியாகியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர்-தேவாஸ் நெடுஞ்சாலையில் மேம்பாலம் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
சர்வீஸ் சாலையில் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் வியாழக்கிழமை அன்று சாலைகளில் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பணிகள் நடந்து வந்த நிலையில் மிக கனமழை பெய்தால் வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை உருவானது.
மாற்று வழி இல்லாததால் மங்கலியா மற்றும் அர்ஜுன் பரோடா இடையே சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசல் நீடித்தது. போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து சரியாக முடியாமல் எட்டு கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நின்றன.
போக்குவரத்து நெரிசலில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சந்தீப் பட்டே, பலராம் படேல், கமல் பஞ்சால் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. போக்குவரத்து அதிகாரிகளும் இல்லாததால் உள்ளூர் மக்களின் உதவியுடன் நெரிசலில் இருந்து வெளியேறுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலானது.
தேவாஸில் உள்ள மருத்துவமனைக்கு சென்றடைந்த போது பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர் என கமல் பஞ்சாலின் மகன் விஜய் பஞ்சால் கூறினார். மத்திய பிரதேசத்தில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram