அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் திறப்பு!! விமர்சனத்துக்கு விளக்கம் கொடுத்த இபிஎஸ்!!

EPS explained the criticism

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் திறக்கும் தமிழக அரசின் முடிவை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது கருத்துக்கான விளக்கத்தை அவர் அளித்துள்ளார். கோயில் நிதியில் கல்லூரிகள் கட்டுவது குறித்த தனது கேள்விக்கு அரசு பதில் சொல்ல முடியாததால் அவதூறில் இறங்கியுள்ளதாக அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கோயில் கட்டுவதற்காகவும், தெய்வ பக்தி காரணமாகவும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் உண்டியலில் பணம் போடுகிறார்கள். அந்தப் பணம் அறநிலையத்துறைக்குச் செல்கிறது. கோயில்களை அபிவிருத்தி செய்யவும், விரிவுபடுத்தவும் தான் அந்தப் பணத்தை மக்கள் போடுகிறார்கள். ஆனால், அரசு அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு கல்லூரிகள் கட்டுகிறது.

அறநிலையத்துறை பணத்தை எதற்காகக் கல்லூரிக்குச் செலவு செய்ய வேண்டும்? கல்விக்குச் செலவு செய்ய வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அரசின் கல்வித்துறைகளில் கல்விக்குத் தேவையான பணம் இல்லையா? கல்லூரிகள் அமைக்க உயர்கல்வித்துறையில் நிதி இல்லையா? அறநிலையத்துறையில் இருந்துதான் கட்ட வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, தனது கருத்து திரித்து வெளியிடப்படுவதாக எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். அவர் பேசுகையில், “மாணவர்கள் நலனை கருதி நான் சொன்னால் கண்ணு, காது, மூக்கு வைத்து விவாதம் நடக்கிறது. அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்லூரி கட்டினால் மாணவர்களுக்கு முழு வசதியும் கிடைக்காது. அறநிலையத் துறையில் இருந்துதான் அதற்கு நிதி ஒதுக்க முடியும். நான் பேசியதை வைத்தே இரண்டு நாளாக விவாதம் நடக்கிறது” என்று தெரிவித்தார்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram