டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசின் புதிய அறிவிப்பு!! விலை உயர்வுக்கு எச்சரிக்கையா??

தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் டாஸ்மாக் நிறுவன ஊழியர்களுக்கு முக்கியமான சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் அடிப்படையில், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும். இது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது. ஆனாலும், கடந்த 2024-25 நிதியாண்டில், எம்.ஆர்.பி (MRP) தொகையை மீறி ரூ.10க்கு மேல் கூடுதலாக மதுபானங்களை விற்றதாக குற்றச்சாட்டு ஏற்பட்டுள்ள மொத்தம் 451 கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, முழுமையான ஊதிய உயர்வு வழங்கப்படாமல், ரூ.1,000 மட்டும் ஊதிய உயர்வாக வழங்கப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், முறைகேடாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது, எதிர்காலத்தில் எவரும் எம்.ஆர்.பி விலையை மீறி வசூலிக்க வேண்டாம் என்பதற்கான எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், இந்த ஊதிய உயர்வு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான சம்பளத்தில் ஒன்றாக சேர்க்கப்பட்டு, இரண்டு நாட்களுக்குள் ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த சுற்றறிக்கை அனைத்து மாவட்ட மேலாளர்கள் மற்றும் மூத்த மண்டல மேலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு நடைமுறையில் எந்தவிதமான தாமதமும் இல்லாமல் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும், பணியாளர்களின் நலனைக் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை, டாஸ்மாக் ஊழியர்களின் நலனை பேணும் வகையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram