தீவிர அரசியல் களத்தில் விஜய்!! பிரமாண்டமாக நடைபெறவுள்ள தவெக 2-வது மாநில மாநாடு!!

The 2nd State Convention of the Tvk to be held on a grand scale

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா இன்று மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் மாநாட்டு பந்தலுக்கான முதல் பந்தக்காலை நட்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாடு, ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்களும், நிர்வாகிகளும் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்தக்கால் நடும் விழாவில், கழகத்தின் மூத்த தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், மற்றும் ஏராளமான தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இந்த மாநாடு தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மக்களாட்சியை நிலைநிறுத்தும்” என்று உறுதியளித்தார்.

மாநாட்டுத் திடலில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மேலாண்மை, உணவு மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு எவ்வித அசவுகரியமும் ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த மாநாடு, தமிழகத்தின் அரசியல் களத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பலத்தையும், செல்வாக்கையும் பறைசாற்றும் வகையில் அமையும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் மற்றும் அறிவிப்புகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram