தவெக தலைவர் விஜய் அரசியலில் நுழைந்ததிலிருந்து மக்களின் பல்வேறு பிரச்சனைகளில் கை கோர்த்து அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அந்தவகையில் கடந்த மாதம் காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையம் நிறுவுவதற்கு எதிராக மக்களுக்கு தனது நேரடி ஆதரவை கொடுத்திருந்தார். தற்போது தருமபுரி பாலக்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் சுங்கசாவடி யில் உள்ளூர் வாசிகளிடம் அதிகளவு கட்டணம் வசூல் செய்வது குறித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேற்கொண்டு அதிர் அவர்கள் கூறியுள்ளதாவது,சுங்கச்சாவடியை சுற்றி 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடியிருப்பில் வாசிகளின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்ற விதியை பின்பற்றாமல் அதிக கட்டணம் வசூலிப்பதோடு நெடுஞ்சாலைப் பணிகள் முழுமையாக முடிவு பெறாத போதிலும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளின் அடிப்படை தேவையான கழிவறை வசதிகளை கூட செய்து முடிக்காமல் மக்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றே ஒரே இலக்குடன் செயல்படும் பாலக்கோடு தர்மபுரி கரகதள்ளி சுங்கச்சாவடியை எதிர்த்து மாபெரும் போராட்டம்.
என இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டமானது, 02/03/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.