ஈபிள் கோபுரத்தை விடவும் உயரமான பாலமா?? திறந்து வைத்த பிரதமர் மோடி!!

A bridge taller than the Eiffel Tower?

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த பாலம் 359 மீட்டர் உயரம் கொண்டதாகவும், 1,315 மீட்டர் நீளம் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இது ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிக உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலம் இந்தியாவின் உத்தம்பூர்-ஸ்ரீநகர்-பரமுல்லா ரயில்வே இணைப்பு திட்டத்தின் (USBRL) முக்கியக் கட்டமாகும்.

பாலம் ரிக்டர் அளவுகோலில் 8 வரை நிலநடுக்கங்களைத் தாங்கும் திறன் கொண்டதாகவும், மணிக்கு 260 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாலம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி கத்ரா – ஸ்ரீநகர் இடையே இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து இயக்கத் தொடங்கி வைத்தார். இதில் பயண நேரம் வெகுவாக குறைந்து, பாத்திரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரிதும் பயனாக இருக்கும்.

மேலும், பிரதமர் மோடி இன்று ஆஞ்சி கட் பாலத்தையும் திறந்து வைத்தார். இது இந்தியாவின் முதல் கேபிள்-ஸ்டேட் ரயில்வே பாலம் ஆகும். இந்த பாலங்கள் இரண்டும் இணைந்து காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்தியாவின் பிற பகுதிகளுடன் தொடர்ந்த ரயில்வே இணைப்பை வழங்குகின்றன. இந்த திட்டங்கள் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என நம்பப்படுகிறது. ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இது நாட்டின் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் சமூக நலத்தை மேம்படுத்தும் ஒரு பெரும் படியாகும். இந்த வளர்ச்சிகளை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டு மக்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இதன் மூலம் இந்திய ரயில்வே துறை புதிய உச்சங்களை எட்டியுள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram