தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் தமிழ் மொழியில் பெயர் பலகைகள் இடம் பெற வேண்டும் என்றும் அவ்வாறு இடம் பெறாத கடைகள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு அபராதங்கள் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்ட இருப்பதாகவும் அந்த குழுக்களின் உதவியோடு அந்தந்த மாவட்டத்தில் தமிழில் பெயர் பலகைகள் இடம் பெறாத கடைகள் மற்றும் நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அபராதங்கள் விதிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். மேலும் கடைகளில் பெயர்பலகைகள் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்ற விதிமுறைகளை மீறாமல் முறையான பெயர் பலகைகள் இடம் பெற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
தமிழக சட்ட விதிகளின்படி கடை மற்றும் நிறுவனங்களில் பெயர் பலகைகளில் முதலில் தமிழில் கடையினுடைய அல்லது நிறுவனத்தினுடைய பெயரானது இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் அதனோடு கூடவே தமிழில் இடம்பெற்ற பெயர் மற்ற மொழிபெயர்களை விட அளவில் பெரியதாக அமைய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தமிழிலும் அதன் பின்பு ஆங்கிலத்திலும் பெயர் பலகையில் இடம்பெற வேண்டும் என்றும் அதன் பின்பு தான் அவரவருடைய விருப்பம் மொழிகளில் பெயர்களை வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்திற்கான இந்த பிரிவில் தலைவராக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செயல்படுவார் என்றும் அவரின் உடைய செயல்பாட்டிற்கு கீழ் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு என தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டு கடைகளுக்கு நேரில் சென்று பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இதற்கான கால அவகாசம் மே 15 என்றும் அந்த அறிவிப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.