தனுஷ் மகனுக்கு பட்டமளிப்பு விழா: விவாகரத்துக்குப் பிறகு பெற்றோர் ஒன்றாக வந்த மகிழ்ச்சியான தருணம்! நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மகன் யாத்ரா, இன்று சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தனது பள்ளி படிப்பை முடித்து பட்டம் பெற்றார். சென்னையில் உள்ள அமெரிக்கன் இண்டர்நேஷனல் ஸ்கூலில் தனது கல்வியை பூர்த்தி செய்த யாத்ரா, விழாவில் பெற்றோர்களுடன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஒரே மேடையில் சந்தித்த அதிசயம் அனைவரையும் கவர்ந்தது. 2022ஆம் ஆண்டு விவாகரத்துக்கு பிறகு இருவரும் ஒன்று சேரும் நிகழ்வுகள் அரிதாகவே நடந்த நிலையில், மகனின் பட்டமளிப்பு விழா இருவரையும் இணைத்துக் கொண்டது.
விழா நிறைவில், யாத்ரா தனது பெற்றோரை அன்புடன் கட்டிப்பிடித்த காட்சி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது. தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனுஷ் ரசிகர்கள் இந்த நிகழ்வை பாராட்டி, “மகனின் சந்தோஷத்துக்காக பெற்றோர் ஒருமித்து நிற்பது மிக நல்ல விஷயம்” என கருத்து தெரிவித்தனர். மேலும், “ஈகோவையும் சண்டையையும் ஒதுக்கி, பெற்றோராக இணைந்து செயல்படுவது அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு” என பதிவிட்டனர்.
இதையடுத்து, நடிகர் தனுஷ் புதிய படம் ‘குபேரா’யின் இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்கவுள்ளார். சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷுடன் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா நடித்துள்ளார்கள். அப்பா, அம்மா, மகன் மூவரும் ஒன்றாக சேர்ந்த அந்த அழகான தருணம் அனைவருக்கும் மனதை நெகிழச் செய்தது.