திருமணம் ஆகி 20 நாட்களுக்குள் புது மாப்பிள்ளை பாதி உடல் அழுகிய நிலையில் மீட்பு செய்யப்பட்டுள்ளார். புதுமண பெண்ணை காணவில்லை. அதிர்ச்சியில் இரு வீட்டாரினரும் சுக்கு நூறாக உடைந்து போய் உள்ளனர். மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் என்ற பகுதியில் வாழ்ந்து வந்தவர் ராஜா ரகுவன்ஷி. இவர் காதலித்த பெண்ணான சோனம் என்பவரை கடந்த மே 11ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு புதுமண ஜோடி இருவரும் மேகாலயா மாவட்டத்திற்கு ஹனிமூன் புறப்பட்டு சென்றுள்ளனர். அவர் இதற்காக சுற்றுலா ஏஜென்ட்களை காண்டாக்ட் செய்து புக்கிங் செய்துள்ளனர். புதுமண தம்பதி மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் வாடகை வண்டி ஒன்றை எடுத்துக்கொண்டு அட்வெஞ்சர் ட்ரை செய்துள்ளனர்.
கடந்த மே 24ஆம் தேதி அவர்கள் அதுவரை தங்கி இருந்த நோங்கிரியாட் கிராமத்தில் உள்ள லார்ஜை வெகெட் செய்துள்ளனர். அதன் பிறகு தான் மனதை உலுக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடைசியாக மணமகள் சோனம் அவரது மாமியாரிடம் நாங்கள் அறிவிப்பார்க்க மேலே செல்கிறோம் என்று கூறி உள்ளாராம். அதன் பிறகு அவர்களுக்கு அழைப்பு மேற்கொண்ட போது தொலைதொடர்பு கிடைக்கவில்லை. குடும்பத்தினர் எட்டு நாட்களுக்கு மேலாக மணமக்களின் அழைப்பை எதிர்பார்த்து வரவில்லை என்றதும் போலீசாரில் புகார் செய்துள்ளனர்.
போலீசார் அந்தப் பகுதிகளில் இருவரையும் தேடி விசாரித்து வந்துள்ளனர். கடந்த ஜூன் இரண்டாம் தேதி அவர்கள் தங்கி இருந்த லாட்ஜில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் கையில் ராஜா என்று பச்சை குத்தியுள்ள, பாதி உடல் அழுகிய நிலையில் ஒரு பிணத்தை கண்டெடுத்துள்ளனர். அந்தப் பிணம் மணமகன் தான் என்று உறுதி செய்த பிறகு அதன் அருகிலேயே அவர்கள் எடுத்து வந்த பொருட்களும் சிதறிக் கிடந்துள்ளன. அந்த இடம் ஆள் அரவமற்ற இடமாக இருக்கிறது என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். போலீசார் இதை கொலை வழக்காக பதிவு செய்து மணமகள் சோனமை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராஜா உடல் சிதைவுற்ற காரணத்தினால், மேகலயாவில் தகனம் செய்யுமாறு போலீசார் வலியுறுத்தியும், குடும்பத்தினர் ஒத்துழைக்காது, இந்தூருக்கு எடுத்து சென்று பிரேத பரிசோதனை மேற்கொள்ள முயன்றுள்ளனர். மேலும் ராஜாவின் உடல் கிடைத்துள்ள பகுதியில் இருந்து 25 கிலோமீட்டர் தள்ளி அவர்கள் பயன்படுத்திய ரெயின் கோட் ஒன்று கிடைத்துள்ளது.
ராஜாவின் உடல் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை முடிவைக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை அமல்படுத்த போவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சந்தோசமாக சென்ற காதல் ஜோடி புதுமணத் தம்பதி பிணமாக வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர் குடும்பத்தினர். மேலும், மணப்பெண்ணின் நிலை குறித்து பெரும் துயரில் ஆழ்ந்துள்ளனர்.