நண்பர்களை அழைத்துக் கொண்டு ஜாலியாக சென்ற மாணவன்!!வழியில் காத்திருந்த எமன்!! பரிதாபமாக போன 3 உயிர்கள்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரி கூட்டு சாலை பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்து மூன்று பள்ளி மாணவர்களின் உயிர் பறிபோனது. இந்த சோகமான நிகழ்வால் அந்த மொத்த பகுதியும் துயரில் மூழ்கியுள்ளது. ஓசூர் தாலுகா நவதி பகுதியைச் சேர்ந்த ஜெகநாதனின் மகன் மதன் (வயது 14) மாரியம்மன் கோவிலில் பூசாரியாக பணிபுரியும் ஜெகநாதனின் ஒரே மகன். மதன் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தான். அவனது நண்பர்கள் ஆரியன் சிங் (13, 8ஆம் வகுப்பு) மற்றும் ஹரீஷ் (14, 9ஆம் வகுப்பு) ஆகிய இருவரும் அதே பள்ளியில் படித்து வந்தனர். மூவரும் சிறந்த நண்பர்கள். நேற்று மாலை மதன், பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை ஓட்டி நண்பர்களை சந்திக்க பள்ளிக்குச் சென்றான். அங்கு ஆரியன் சிங்கை ஏற்றி கொண்டு அந்திவாடி பகுதிக்கு சென்று, ஹரீஷையும் ஏற்றிக் கொண்டு மூவரும் ஒரே பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது மத்திகிரி கூட்டு சாலை அருகே அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மோதி விழுந்த மூவரும் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தனர். இதில் ஆரியன் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.மதன் மற்றும் ஹரீஷ் ஆகிய இருவரையும் அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சில் கொண்டு சென்று ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்த மத்திகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் கனவு குழந்தைகளை இழந்த பெற்றோர் துடிக்கின்ற நிலையில், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் ஆழ்ந்த கவலையில் மூழ்கியுள்ளனர்.

 

 

 

 

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram