பெற்றோரை எதிர்த்து காதலியை கரம் பிடித்த வாலிபர்!! காதல் திருமணம் கொடூர கொலையோடு முடிவு!!

சென்னை அசோக் நகர் பகுதியில் வசித்து வந்த கலையரசன் (23) தனது காதலி தமிழரசியை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் எல்லாம் நலமாக இருந்தாலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கலையரசன் மற்றும் தமிழரசி இடையே கருத்து வேறுபாடுகள் தீவிரமாகி, இருவரும் தனித்தனியாக வாழத் தொடங்கினர். இதனால் குடும்பத்தில் பெரிய மனஉளைச்சலும் பிரச்சினைகளும் ஏற்பட்டன. கடந்த ஆண்டு கலையரசன், தனது மனைவி தமிழரசியின் சகோதரர் சக்திவேலை (20) தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சக்திவேல் மற்றும் மற்றொரு சகோதரர் சஞ்சய் (19) இருவரும் கலையரசனை தாக்குவதற்காக திட்டமிட்டதாக தெரிகிறது. இந்த கோபம் கடந்த 15ஆம் தேதி வெடித்தது. அன்றைய தினம் கலையரசன் அசோக் நகர் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது சக்திவேல், சஞ்சய் மற்றும் இவர்களின் நண்பர் சுனில் குமார் (20) மூவரும் கலையரசனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக தாக்கினர்.

பலத்த காயங்களுடன் கலையரசன் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும், அவரை மருத்துவர்கள் காப்பாற்ற முடியவில்லை. கலையரசனின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர். இதன்பேரில் அசோக் நகர் போலீசார் சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதலாவதாக சக்திவேல், சஞ்சய், சுனில்குமார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையை விரிவுபடுத்திய போலீசார், இந்த கொலைக்குத் பின்னால் மேலும் சதி இருப்பதாக சந்தேகம் கொண்டனர். கலையரசனின் மனைவி தமிழரசி, அவரது நண்பர் சரவணன் மற்றும் தமிழரசியின் தாயார் சந்தியா (65) ஆகியோரும் இந்த கொலைக்குத் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து தமிழரசி மற்றும் சரவணன் தலைமறைவாக இருந்ததால் அவர்களையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். தற்போது சந்தியாவையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவனை பாதுகாக்க வேண்டிய மனைவி அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து சதி செய்து கொலை செய்த சம்பவம் அசோக் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொலை சம்பந்தப்பட்ட மற்றவர்கள் தொடர்பான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அருகிலுள்ள மக்கள் மற்றும் கலையரசனின் குடும்பத்தினர் நீதிக்காக காத்திருக்கின்றனர்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others

Latest Post

Student rape case!! 4 people arrested!!
மாணவி பலாத்காரம் வழக்கு!! 4 பேர் கைது !! வெளியான அதிர்ச்சி தகவல்! கொல்கத்தா: கொல்கத்தாவில் சட்ட கல்லூரி வளாகத்தை காதலை ஏற்க மறுத்த மனைவியே 31 வயது இளைஞர் பலாத்காரம் செய்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மாணவியை அத்துமீறி காதலித்ததாக கூறப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் முதல்வர் மம்தா பானர்ஜி பதவி வகிக்கிறார். மாணவர் கட்சி பிரிவை சார்ந்த சத்ரரா பர்ஷத். கொல்கத்தா தெற்கு மாவட்டத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் மனோஜ் மிஸ்ரா என்பவர் கொல்கத்தாவின் கல்லூரிக்குள் நுழைந்து பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஒரு தலையாக காதலித்த வந்த மனோஜ் மிஸ்ரா மாணவி தன் காதலை ஏற்காததால் அவரை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கில் மனோஜ் மிஸ்ரா, ஜாயிப் அகமது, பிரமிட் முகர்ஜி மற்றும் கல்லூரியின் காவலாளி என நான்கு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையின் போது மாணவியின் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் காயங்கள் இருந்ததாகவும் ,சிராய்ப்பு காயங்களும் உடலில் காணப்படுகிறது. வலுக்கட்டாயமாக மாணவியை பலாத்காரம் செய்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரை பலாத்காரம் செய்ததோடு விடாமல் தாக்கியுள்ளார் மனோஜ் மிஸ்ரா. மேலும், பல இடங்களில் கடித்துள்ளார் கொடூரன். நகைக்கிறதுகள் உள்ள நிலையில் பிடியிலிருந்து தப்பிக்க முயன்ற போது மேலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனை கூறப்பட்டுள்ளது.
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram