தமிழகத்திலுள்ள சென்னை அம்பத்தூர் சிப்காட் தொழிற்பேட்டை இந்த வருடத்திற்கான அடுத்த கட்ட முயற்சியை எடுத்து வைத்துள்ளது. இந்த தொழிற்பேட்டையில் 2000 தொழில் நிறுவனங்களும், பேட்டை சுற்றி 5000 நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆண்டிற்கு இருபது ஆயிரம் கோடிக்கு மேல் வியாபாரம் நடக்கின்றது. 30 சதவீதம் ஏற்றுமதி வியாபாரமும் நடத்துகின்றது. மிகப்பெரிய தொழில் நிறுவனமான இது தற்சமயம் ஆக்மி 2025 என்கின்ற இயந்திர தொழில்நுட்ப கண்காட்சியை நடத்த உள்ளது.
இந்த கண்காட்சி ஆனது ஜூன் 19 முதல் 23 வரை ஐந்து நாட்கள் நடக்கவிருக்கிறது. இதில் புதியதாக கல்லூரி மாணவர்கள் ப்ராஜெக்ட், AI தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் அதிநவீன கருவிகள் இடம்பெறப் போவதாக அந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சதீஷ் பாபு தெரிவித்துள்ளார். இது பிரம்மாண்டமாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 30 ஆயிரம் கிலோமீட்டர் அளவில் நடைபெற உள்ளது. இதனை ஏ ஐ இ எம் ஏ என்கின்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் நடத்த உள்ளது.
இதே போல் கண்காட்சி அம்பத்தூர் சிப்காட்டால் 16ஆவது முறையாக இது நடத்தப்படுகிறது. ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் ஒருமுறை இது நடைபெறும். கடந்த 2023 இல் நடைபெற்ற இதே போல் கண்காட்சி மூலம் இந்நிறுவனம் அறநூறு கோடி வியாபாரம் செய்திருந்தது. தற்சமயம் ஏஐ தொழில்நுட்பங்கள் களமிறங்குகின்றன. இந்த வருடம் 750 கோடிக்கும் மேல் வியாபாரம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.