வெகு நாட்களுக்குப் பின் மகன்களை சந்தித்த ரவி மோகன்!! பகிர்ந்துள்ள புகைப்படம்!!

ரவி மோகன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர். மேலும் கடந்த ஒரு வருடமாக இவர் குறித்த செய்திகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வந்திருந்தன. அவற்றில் முக்கியமானது அவருடைய விவகாரத்து அறிவிப்பு. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவர் குறித்தும் அவர்கள் வெளியிட்டிருந்த பதிவு, அதன் பிறகு கெனிஷா உடன் ஆனா ரவி மோகனின் உறவு ஆகியவை பெரும்பாலும் பேசப்பட்டிருந்தன. சமீபத்தில் நடந்த 3 பிஎச் கே படக்குழுவில் கூட தான் பிறந்ததிலிருந்து சொந்த வீட்டில் இருந்ததாகவும் தற்சமயம் தான் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் ரொம்ப எமோஷனலாக பேசியிருந்தார்.

இவர் சமீப காலமாக பாடகி கெனிஷாவுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி இருந்தது. விவாகரத்து இன்னும் கிடைக்காத நிலையில் இவர்களின் உறவு குறித்து பெரும் பேசும் பொருள் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இவரது மனைவி ஆர்த்தி இவர் விவாகரத்து அறிவிப்புக்கு பின் எங்களது இரு குழந்தையை கூட சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பின் இவர்கள் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் இருவருக்கும் இனிமேல் சமூக வலைதளங்களில் ஒருவர் மீது ஒருவர் உங்கள் உறவு குறித்து பதிவிட கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆர்த்தி ஸ்டேட்மெண்ட்க்கு எதிராக, தற்சமயம் தனது இரு மகன்களையும் சந்தித்துள்ளார் ரவி மோகன். தனது மூத்த மகன் ஆரவின் பிறந்த நாளை முன்னிட்டு இவர்கள் சந்தித்து கொண்டாடியுள்ளனர். இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram