ரவி மோகன் இவர் தமிழ் சினிமாவில் பணிபுரியும் இந்திய நடிகர் ஆவார்.ரவி மோகன் ஜெயம் (2003) திரைப்படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார்.அவருடைய வெற்றி 2025 வரை அவரது மேடைப் பெயருக்கு முன்னோட்டமாக அந்த பட்டதை மாற்றியது . அவர் தமிழ்நாடு மாநில விருதையும் ,ஒரு பிலிம்பேர் விருதையும் ,மூன்று சீமா விருதுகளையும் வென்றுள்ளார் .இவர் தொடர்ந்து வெற்றி படங்களையும் வருடாவருடம் கொடுத்து வந்தார் .
அவருக்கு ஒரு சகோதரனும் ,ஒரு சகோதரியும் உள்ளனர் .இவர் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் வளர்ந்தவர். ரவி மோகன் ஆர்த்தி என்பவரை 2009இல் மணந்தார் .அவர்களுக்கு ஆரவ் மற்றும் அயன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் . ரவியும் ஆர்த்தியும் 2024இல் புரிந்தனர் ,ரவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார் . பிறகு 2025 ஜனவரியில் அவர் தனது உண்மையான பெயர் ரவி மோகன் என மாற்றிக்கொண்டார் .
சமீபத்தில் இவர் நடித்த கராத்தே பாபு , பராசக்தி , ஜீனி, தனி ஒருவன் 2 போன்ற படங்கள் இன்னும் வெளிவராத நிலையில் உள்ளன. இந்நிலையில் ,சமீபத்தில் நடந்த ஐசரியின் மகள் திருமண விழாவில் ரவி மோகன் அவரது தோழி கெனிஷா அவர்களுடன் கலந்து கொண்டார் .இதனிடையே இந்த விஷயம் அனைவரிடத்திலும் பரவியது .இந்நிலையில் மனைவி ஆர்த்தி, கெனிஷா அவரை கண்டித்தார். தற்போது ரவி மோகன் ஆர்த்தியை கண்டித்தார்.
ரவி மோகன் பேட்டியில் ,கெனிஷா என்னுடைய சிறந்த துணை ,நான் துன்பத்தில் இருக்கும் போது அவர் எனக்கு ஆறுதலாக இருந்தார். நான் எனது முன்னாள் மனைவியை மட்டுமே விலக முடிவு எடுத்தேன் தவிர ,என் குழந்தைகளை அல்ல. தனது குழந்தைகள்தான் என் பெருமை ,மகிழ்ச்சி ;அவர்களுக்கு நான் அனைத்தும் செய்வேன். சில நாட்களாக எனக்கிருக்கும் வருத்தம் , 16 ஆண்டுகால துயரமான வாழ்க்கையைவிட பெரிதல்ல .கடந்த 5 ஆண்டுகளாக என் வருமானத்தை பெற்றோருக்கு கூட அனுப்பவில்லை .இத்தனை நாட்களாக அமைதியாக, பொறுமையாக இருந்தேன். எனது அமைதிக்கும் எல்லை உண்டு என்று ரவி மோகன் தனது x வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.