சிபிஐ பிடியில் விஜய்? – டெல்லி தலைமையகத்தில் விசாரணை ஆரம்பம்; தவெக தொண்டர்கள் பரபரப்பு!
புது டெல்லி: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
இன்று காலை நடந்தது என்ன?
தனி விமானத்தில் வருகை: இன்று காலை 7 மணிக்குச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட விஜய், 10 மணியளவில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நேரடி ஆஜர்: சரியாக காலை 11:15 மணிக்கு டெல்லி லோதி ரோட்டில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்குள் விஜய் நுழைந்தார். அவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வந்திருந்தனர்.
விசாரணை வளையம்: கரூரில் அனுமதி பெறப்பட்டதை விடக் கூடுதல் கூட்டம் கூடியது எப்படி? பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் என்ன? என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் சுமார் 150-க்கும் மேற்பட்ட கேள்விகளுடன் விஜயை எதிர்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் தவெக பலம்: விஜய் ஆஜராவதை ஒட்டி, டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் டெல்லி மற்றும் அண்டை மாநில நிர்வாகிகள் குவிந்துள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க அங்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரசியல் சதியா? விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட ரிலீஸுக்குச் சில நாட்களே உள்ள நிலையில், இந்தச் சிபிஐ விசாரணை நடைபெறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என தவெக தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இருப்பினும், சட்டத்தின் மீதான நம்பிக்கையுடன் விஜய் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.


