அஜித்குமாரின் மரணம்!! தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் ஏற்பட்ட விசாரணை மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த நிகிதா என்ற பெண்ணின் தங்க நகைகள் காரிலிருந்து திருடப்பட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரைத் தொடர்ந்து, அந்த கோவிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த அஜித்குமார் என்ற இளைஞரை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு அவரை விடுவித்த காவல் துறை, மறுநாள் மீண்டும் அழைத்து தீவிர விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவர் காவல் கட்டுப்பாட்டிலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் மீதான அதிருப்தியைத் தெரிவித்த தவெக தலைவர் விஜய், சற்று முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காவல் நிலைய மரணம் தமிழகத்தில் புதிதல்ல.

சாத்தான்குளம், அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த அரசு மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இல்லை. அதிகாரத்தின் தீமையைப் பயன்படுத்தி மக்கள் மீது அராஜகம் நடத்துகிறார்கள்” எனக் கண்டித்துள்ளார். மேலும், “சம்பந்தப்பட்ட போலீசாரை இடமாற்றம் செய்வது மட்டுமல்லாமல், அவர்களிடம் இருந்து உண்மையான விசாரணை நடத்தி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற கொடூர சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் முதல்வர் உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அடக்குமுறையைத் தாங்கி மக்களின் அழுகுரல் எழும் நேரத்தில் அவர்கள் கண்ணீருக்கு நீதியை நிறுவ வேண்டும். எதிர்வரும் தேர்தலில் மக்கள் இந்த ஆட்சிக்கு பதிலடி கொடுப்பார்கள் என்பதை எங்கள் கழகம் முழுமையாக நம்புகிறது என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

 

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others

Latest Post

Student rape case!! 4 people arrested!!
மாணவி பலாத்காரம் வழக்கு!! 4 பேர் கைது !! வெளியான அதிர்ச்சி தகவல்! கொல்கத்தா: கொல்கத்தாவில் சட்ட கல்லூரி வளாகத்தை காதலை ஏற்க மறுத்த மனைவியே 31 வயது இளைஞர் பலாத்காரம் செய்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மாணவியை அத்துமீறி காதலித்ததாக கூறப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் முதல்வர் மம்தா பானர்ஜி பதவி வகிக்கிறார். மாணவர் கட்சி பிரிவை சார்ந்த சத்ரரா பர்ஷத். கொல்கத்தா தெற்கு மாவட்டத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் மனோஜ் மிஸ்ரா என்பவர் கொல்கத்தாவின் கல்லூரிக்குள் நுழைந்து பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஒரு தலையாக காதலித்த வந்த மனோஜ் மிஸ்ரா மாணவி தன் காதலை ஏற்காததால் அவரை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கில் மனோஜ் மிஸ்ரா, ஜாயிப் அகமது, பிரமிட் முகர்ஜி மற்றும் கல்லூரியின் காவலாளி என நான்கு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையின் போது மாணவியின் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் காயங்கள் இருந்ததாகவும் ,சிராய்ப்பு காயங்களும் உடலில் காணப்படுகிறது. வலுக்கட்டாயமாக மாணவியை பலாத்காரம் செய்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரை பலாத்காரம் செய்ததோடு விடாமல் தாக்கியுள்ளார் மனோஜ் மிஸ்ரா. மேலும், பல இடங்களில் கடித்துள்ளார் கொடூரன். நகைக்கிறதுகள் உள்ள நிலையில் பிடியிலிருந்து தப்பிக்க முயன்ற போது மேலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனை கூறப்பட்டுள்ளது.
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram