கிரிக்கெட்: தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் அஸ்வின் செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎல் அதாவது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது இதில் முக்கிய வீரர்கள் பலரும் அபாரமாக விளையாடி வருகின்றனர். இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின். திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன் இரு அணிகளும் மோதிய போட்டியில் அஸ்வின் பேட்டிங் செய்த போது நடுவர் கிருத்திகா எல்பி டபிள்யு முறையில் அவுட் கொடுத்தார்.
அப்போது அணியிடம் ரிவ்யூ ஏதும் மீதம் இல்லை அதனால் ஆத்திரமடைந்த அஸ்வின் கோபம் கொண்டு நடுவரிடம் எதிர்த்து வாதமிட்டார் அது மட்டுமல்லாமல் கடுமையாக நடந்து கொண்டார். இந்நிலையில் அவர் வேகமாக மைதானத்தை விட்டு வெளியே செல்லும்போது கையில் இருந்த கிளவுஸ்களை கழற்றி தூக்கி எறிந்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது.
இதனால் நிர்வாகம் இந்த போட்டியில் அம்பயரை எதிர்த்து வாதமிட்டதற்காகவும், கிளவுஸ்களை வீசி எறிந்ததற்காகவும், மொத்தம் 30 சதவீதம் சம்பளத்தில் இருந்து அபராதம் கட்ட வேண்டும் என தண்டனை விதிக்கப்பட்டது. அதாவது அம்பயரை எதிர்த்து வாதம் என்பதற்கு 10 சதவீதமும், உபகரணங்களை வீசியதற்கு 20 சதவீதமும் என 30 சதவீதம் அபராதம் கட்ட வேண்டும் என விதிக்கப்பட்டது.