இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘பைசன்’ திரைப்படம், உலகளவில் இதுவரை ரூ.70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படம், தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி வெளியானது. வெளியான நாள் முதல் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரம்மாண்ட வெற்றி: ‘பைசன்’ வெளியாகி 25 நாட்களைக் கடந்த நிலையிலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வசூல் விவரம்: உலகம் முழுவதும் இப்படம் தற்போது ரூ.70 கோடி வசூலைத் தாண்டிச் சாதனை படைத்துள்ளது.
பாராட்டு மழை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளனர்.
மாரி செல்வராஜ் மேஜிக்:
சமூக அக்கறையுடன் கூடிய அழுத்தமான கதையம்சத்தை மையப்படுத்தி, துருவ் விக்ரமின் உக்கிரமான நடிப்பில் உருவான ‘பைசன்’, மாரி செல்வராஜின் முந்தைய படங்களைப் போலவே ஒரு விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
துருவ் விக்ரம் தன் நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். சமூகத்திற்குத் தேவையான வலிமையான கதைகள், வசூலிலும் சக்கைப் போடு போட முடியும் என்பதை இந்தப் படத்தின் வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது.





