ஒட்டாவா: கனடாவின் கடற்கரையில் கருப்பு நிறத்தில் பனிப்பாறையை ஒன்று கண்டதாக கூறப்படுகிறது. அரிதாக காணப்படும் பனிப்பாறை ஒன்று கடலில் இருந்து வெளிவந்தது. பனிப்பாறையை பார்த்த சிலர் உலக அழிவிற்கான எச்சரிக்கையாக இருக்கலாம் என்று பலர் பீதியில் உள்ளனர். கனடாவின் லாப்ரடோர் கடற்கரையின் பகுதியிலிருந்து கருப்பு நிற பனிப்பாறை ஒன்றை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. படையிலிருந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த கல்லூரி அந்தோணி உசன் என்ற மீனவர் அந்த பனிப்பாறையை பார்த்ததாகவும், அதனை தனது கைபேசியில் படம் பிடித்துள்ளார்.
மேலும், அந்தப் பனிப்பாறையானது சுமார் மூன்று மாடி கட்டிடத்தில் அளவில் இருந்தது என அவர் கூறியுள்ளார். தனது வாழ்நாளில் இது போன்ற பனிப்பாறையை கண்டதில்லை என்று கூறியிருக்கிறார். அதன்படி சோசியல் மீடியாக்களில் இந்த பனிப்பாறையின் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இந்த வகையான பனிப்பாறைகள் மழையின் உச்சியில் இருந்து தான் அதிகமாக உருவாகும்.
கோடை காலங்களில் அடர்த்தி குறைந்து அடிவாரத்திற்கு வருவது வழக்கம். அது போன்று வந்த போது தான் மீனவர் ஒருவர் பார்த்திருக்கிறார். செடி, கொடி, மண், மரத்தின் பாகங்கள் என ஏராளமான பொருட்களை பனிப்பாறையில் இருந்திருக்கலாம். கோடை காலம் முடிந்ததால் பனிக்காலம் தொடங்கும் போது மண்ணை சுற்றி பனி உருவாகலாம். அப்படி உருவான பனிக்கட்டி கடலுக்குள் வந்து சேர்ந்த போது மீனவர் பார்த்திருக்கிறார் என்று ஆய்வாளர் லெவ் தாராசோவ் பல்கலைக்கழகத்திலிருந்து கூறியிருக்கிறார்.
வேறு சில ஆய்வாளர்கள், கருப்பான வண்டல் மண்ணாக இருந்திருக்கலாம் என்றும், மண் பல நூற்றாண்டுகளுக்கு முன் பணிப்பாறைக்குள் சரிந்து விழுந்து இருக்க வாய்ப்புள்ளதாகவும், மீனவர் பார்த்த கருப்பு பனிப்பாறை மொத்த அளவிலிருந்து வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இப்படிப் பார்த்தால் மூடி இருந்த பனி முழுவதும் கரைந்துள்ளதால் இந்த அளவில் தெரிந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். வேறு சிலர் உலகில் நடக்கும் அனைத்து மாற்றங்களையும் குறிப்பிட்டு கருப்பு பனிப்பாறை என்பது உலகின் அழிவை குறிக்கிறது என்றும் பீதியில் உள்ளனர்.