புதுடெல்லி: கேரளாவில் நிலம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் வெற்றி பெற்றது . கடந்த ஜூன் 19ஆம் தேதி கேரளாவில் நிலம்பூர் தொகுதி, மேற்கு வங்கத்தின் கலிகஞ்ச் தொகுதி, காதி தொகுதிகள் குஜராத்தின் விசவதார் தொகுதி மற்றும் பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதி ஆகிய பகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. கேரளா மற்றும் மேற்கு வங்கம் அடுத்த சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் இடைத்தேர்தலை அனைத்து கட்சிகளும் 2026 காண தேர்தல் முன்னோட்டமாக பார்க்கின்றன. அதன்படி காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
நிலம்பூர்:கேரளாவில் நிலம்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஆரியதன் ஷிகாத் ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே முன்னணியில் இருந்தார். ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 1,177 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் ஆரியதன். அவரது மொத்தம் 77, 737 ஓட்டுக்களை வாங்கியுள்ளார்.
அவருடன் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் 66 ஆயிரத்து 660 ஓட்டுக்களை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். மூன்று மற்றும் நான்காவது இடத்தை பெற்றவர்கள் முறையே முயற்சியாக போட்டியிட்டவர் அன்வர் 19,760 ஓட்டுக்களையும் மற்றும் பாஜக சார்பில் 8648 ஓட்டுக்களையும் பெற்றுள்ளனர். எம்பி பிரியங்காவின் வயநாடு லோக்சபா தொகுதிக்குள் நிலம்பூர் தொகுதி வருவதால் காங்கிரசுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
மேற்கு லூதியானா:
டெல்லியில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு ஆம் ஆத்மி போட்டியிடக்கூடிய முதல் தேர்தல் ஆகும். ஆமாத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா 30,237 ஓட்டுகளை பெற்று மேற்கு லூதியானாவில் வெற்றி பெற்றார். இவருடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பாரத் பூஷன் அஷூ 21 ஆயிரத்து 540 ஓட்டுக்களை வாங்கி இரண்டாம் இடம் பிடித்தார் மற்றும் பாஜக வேட்பாளர் ஜீவன் குப்தா 17435 ஓட்டுகள் பெற்றார்.
குஜராத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவியதிலிருந்து ஆம் ஆத்மி வேட்பாளர் கோபால் இதாலியா 75,942 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு போட்டியாக களம் இறங்கிய பாஜக வேட்பாளர் கீர்த்தி பட்டேல் 58 ஆயிரத்து 388 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.17 ஆயிரத்து 554 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கீர்த்தி படேலை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் 551 ஓட்டுகள் பெற்று இறுதி நிலைக்கு தள்ளப்பட்டார். மீண்டும் விசவதால் தொகுதி ஆம் ஆத்மி வசம் சென்றது குறிப்பிடத்தக்கது.
காதி தொகுதி: பாஜகவின் வேட்பாளர் ராஜேந்திர குமார் சவாடா மொத்தம் 99 ஆயிரத்து 742 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் சவாடா 60 ஆயிரத்து 290 ஓட்டுகளை பெற்று பின்னுக்கு தள்ளப்பட்டது. இதன் மூலம் 39 ஆயிரத்து 452 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றது. மேலும் ஆம் ஆத்மி வேட்பாளர் ஜெகதீஷ் சவாடா 3096 ஓட்டுகளைப் பெற்றார்.
கலி கஞ்ச்:திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ நாசிருதீன் அகமது மறைவால் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. அவரது மகள் ஆலிபா அகமது திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் 59,566 ஓட்டுகள் பெற்றார்.பாஜக வேட்பாளர் ஆஷிஷ் கோஷ் 25,412 ஓட்டுகள் வாங்கினார். அதன்படி திரிணாமுல் காங்கிரஸ் 31,154 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் காங்கிரஸ் வேட்பாளர் கபில் உதின் 19,102 ஓட்டுகளை பெற்று கடைசிக்கு தள்ளப்பட்டார்