பெங்களூர்: பெங்களூரில் நடந்த ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் பங்கேற்ற 11 பேர் கூட்ட நெரிசலில் பலியாகியதை அடுத்து விராட் கோலி மீது வழக்கு பதிவு செய்ய புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் இரவு நடந்த பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பை பெறுவது 17 வருடங்களாக கனவாக நிலையில் 18 வது ஐபிஎல் போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி கோப்பையை தட்டி பறித்தது. இது பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்தை கோலாகலமாக கொண்டாடினர் நடிகர்கள். நான்காம் தேதி பெங்களூர் வந்த ஆர் சி பி வீரர்களுக்கு துணை முதல்வர் டி.கே.குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
கிரிக்கெட் மைதானத்தில் அதற்கான வெற்றி கொண்டாட்டம் நடத்தப்பட்ட நேரத்தில் பல லட்சம் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் ஒன்று திரண்டனர். பெற்றுக் கொண்டாட்டத்தின் போது 14 வயது சிறுமி மற்றும் தமிழகப் பெண் உள்பட பதினோரு பேர் இறந்ததாக கூறப்படுகிறது.
மேலும், 47 பேர் படுகாயம் அடைந்ததாகவும், இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துவதாகவும், கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு கடி விமர்சனங்கள் வருகின்றன. இந்நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் பெங்களூர் கப்பன்பார்க் போலீசில் விராட் கோலி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு நிற்கில் புகாரை சேர்த்து விசாரிப்பதாகவும் உறுதியளித்துள்ளனர் போலீசார். கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்தது தொடர்பாக ஐபிஎல் சாம்பியன்கள் மார்க்கெட்டிங் பிரிவின் தலைவர் நிகில் சோசலி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆர்.சி.பி அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனங்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.