ஐவர் மரணத்தை தொடர்ந்து மத்திய அரசின் புதிய முடிவு!! பிற மாநிலங்களிலும் செயல்படுமா!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் தானே பகுதியில் கூட்ட நெரிசல் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து சரமாரியாக ஒரு கும்பல் கீழே விழுந்துள்ளனர். அதில் ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிலர் தானே அரசு மருத்துவமனையிலும், சிவாஜி மருத்துவமனையிலும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்தியாவின் முதுகெலும்பான ரயில்வே துறையில் இப்படி நடந்திருப்பது பெரும் துயரத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில், நடப்பு மத்திய அரசு 11 ஆண்டுகள் பூர்த்தியை கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. இறந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், காயப்பட்டவர்கள் கூடிய விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக அவர் கூறியுள்ளார். மகாராஷ்டிரா முதல்வரும் இது குறித்த பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார். எட்டு பேர் தவறி விழுந்ததாகவும், அதில் ஐவர் சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்துள்ளனர்.

மீதமுள்ளவர்கள் நல்ல முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் குடும்பத்தார்களுக்கு தனது அஞ்சலியை தெரிவித்துவிட்டு, மும்பையின் புறநகர்களில் இயங்கும் ரயில்களுக்கு தானியங்கி கதவுகளை பொருத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். தற்சமயம் அங்கு விபத்து ஏற்பட்ட காரணத்தினால் இந்த வசதி செய்யப்பட்டு வருகின்றது. முன்னேச்செரிக்கை நடவடிக்கையாக பிற மாநிலங்களிலும் இது செயல்படுமா! என சமூக ஆர்வலர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். வருமுன் காப்பது போல இதை அனைத்து இடங்களிலும் செயல்படுத்தினால் விபத்துக்கள் மற்றும் தற்கொலைகள் குறைக்கப்படும் என்று பலர் தெரிவித்து வருகின்றனர்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram