சென்னை “ஊழியர்கள் ஒரு நிறுவனத்தின் முதுகெலும்பு” என்று பலர் சொல்வார்கள். ஆனால் இந்த வார்த்தைகளை செயலால் நிரூபித்திருக்கிறார் சென்னைபூர்வமான IT ஸ்டார்ட் அப் நிறுவனமான Agilisium நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜ் பாபு. தொழில்நுட்ப சேவைகளில் மின்னும் இந்த நிறுவனம் தனது 10வது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் நிகழ்ச்சியை வெகு விமர்சையாக கடந்த வாரம் உலக வர்த்தக மையத்தில் (World Trade Center, Chennai) நடத்தியது. ஆனால் இந்த விழாவில் நடந்த ஒரு செயல், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது! பத்தாண்டுகளாக நிறுவனத்துடன் உறுதியுடன் பணியாற்றி வந்த 25 ஊழியர்களுக்கு, ரூ.20 லட்சம் மதிப்புள்ள பிரமாண்டமான SUV கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக பரிசாக வழங்கப்பட்டன. பரிசளிக்கும் இந்த அறிவிப்பு அப்போது வரை யாருக்கும் தெரியாத சர்ப்ரைஸ்!
“ஒரு நிறுவனம் வளரவேண்டுமானால், அதில் உள்ள மனிதர்கள் முக்கியம். அவர்கள் ஒவ்வொருவரும் உணர்வுடன் வேலை செய்ய வேண்டும். அதை உருவாக்கவே இந்த பரிசுகள்.” வெளிநாடுகளில் (அமெரிக்கா, கனடா) இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கும் கார்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், மற்ற ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுகள் உள்ளிட்ட கூடுதல் நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.
குடும்பத்துடன் கொண்டாடும் மகிழ்ச்சி ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, ஒரு Family Celebration மாதிரியே அமைந்தது. வெறும் தொழில்நுட்ப நிறுவனமாக இல்லாமல், மனிதர்களின் உறவுகளை மதிக்கக்கூடிய ஒரே குடும்பமாக திகழ்கிறது Agilisium.
சிறியதாய் தொடங்கி, பெரியதாய் வளர்ந்து வரும் ஒரு நிறுவனம் Agilisium 2014ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது லைஃப் சயின்ஸ் துறையை மையமாக கொண்டு, உலகம் முழுவதும் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது. மனிதர்களை மதிக்கும் பண்பாட்டுடன் தொழில்நுட்ப வளர்ச்சி இரண்டையும் சமநிலைப்படுத்தி நடத்தும் நிறுவன Rare Combination என்பதில் ஆச்சரியம் இல்லை…