வாஷிங்டன்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானியை நோய் கிருமி கடத்தியதாக கூறி அமெரிக்காவில் எஃப்பிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சீன நாட்டை சேர்ந்தவர் செங்சுவான் ஹான். ஹவாஷோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக இருந்தவர். டெட்ராய்ட் விமானத்தில் அமெரிக்காவிற்கு நோய்க்கிருமிகள் கடத்தியதாக எப்பிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அமெரிக்காவில் உயிரியல் பொருட்களை கடத்தியதற்காகவும், இதற்காக அதிகாரிகளிடம் பொய் கூறியதாகவும் சீன நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளது. செங்சுவான் ஹான் என்பவர் சீன குடிமகன் மற்றும் சீனாவில் வுஹானில் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற மாணவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகத்திற்கு தொடர்புடைய ஒரு நபருக்கு முகவரி ஈடுபட்ட வட்ட புழுக்கள் தொடர்பான உயிரியல் பொருட்களை நான்கு பொட்டலங்களாக சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி இருக்கிறார். டெட்ராய்டு பெருநகர விமான நிலையத்திற்கு அவர் வந்தவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் எஃப் பி ஐ அதிகாரிகள்.
மேலும், விசாரித்த போது தவறினை ஒப்புக்கொண்டு உள்ளார். இதற்கு முன் பயிர்களை அழிக்கக்கூடிய நோய் கிருமிகளை கடத்தியதாக யுன்கிங் ஜியான் மற்றும் சின்யோன் லியு ஆகிய சீனர்களை மத்திய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.
விசாரணை நடத்திய போது,” எங்களுக்கு தெரியாமல் பையில் யாரோ வைத்திருப்பார்கள்” என்ற பதிலை ஏற்காது எஃப்பிஐ அதிகாரிகள் ஆபத்தான பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்தியது மிகப்பெரிய தேச பாதுகாப்பு பிரச்சனையாக மாறி உள்ளது என்று இதுவரையும் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் விடப்பட்ட நிலையில் மற்றொருவரை எப்பிஐ அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்