திட்டமிட்டு வதந்தி பரப்புறாங்க!! அமித்ஷாவிற்கு ஸ்டாலின் கொடுத்த ‘தார்மாறு’ பதில்!!

CM Stalin, Amit Shah, Dindigul Speech, DMK vs BJP, Tamil Nadu Politics.

அமித்ஷா பேசியது அப்பட்டமான பொய் திண்டுக்கல் மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விமர்சனங்களுக்குப் பகிரங்கமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

அமித்ஷாவுக்குக் கண்டனம்: சமீபத்தில் தமிழகம் வந்திருந்த அமித்ஷா, “தமிழகத்தில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்த ஸ்டாலின், “இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் சிலர் அரசியல் குளிர்காய முயற்சி செய்கிறார்கள். தமிழகத்தில் இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவதாக அமித்ஷா கூறியது அப்பட்டமான பொய்” எனத் தெரிவித்தார்.

அவதூறு பரப்புவதாகச் சாடல்: மேலும் பேசிய அவர், “மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவரே இப்படிப் பொய்யான மற்றும் அவதூறான தகவல்களைப் பரப்பிச் சென்றிருப்பது கண்டனத்திற்குரியது. தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதைச் சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க நினைக்கும் எவரது முயற்சியும் இங்கே பலிக்காது” என ஆவேசமாகப் பேசினார்.

மக்கள் நலனே முக்கியம்: அரசியல் ரீதியாகத் தமிழ்நாட்டை வீழ்த்த முடியாது என்பதால், மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கப் பார்க்கிறார்கள் என்றும், ஆனால் திமுக அரசு மக்கள் நலப்பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார். 2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஸ்டாலினின் இந்தப் பேச்சு அரசியல் களத்தில் அனலைக் கூட்டியுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram