பிரதமருக்கு ஸ்டாலின் அதிரடி கடிதம்!! நிறுத்தப்பட்ட ரயில்வே திட்டங்களை மீண்டும் தொடங்க கோரிக்கை!! தமிழக வளர்ச்சிக்கு ரயில் வேகம் கிடைக்குமா??

CM Stalin letter to PM Modi on Tamil Nadu Railway projects 2026

தமிழகத்தில் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் பல நிதி நெருக்கடியால் மந்த நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கியக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். “மத்திய அரசால் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு, எந்தவிதத் தாமதமும் இன்றி முன்னுரிமை அடிப்படையில் முழுமையான நிதியை விடுவிக்க வேண்டும்” என்று அவர் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, நிதிப் பற்றாக்குறையால் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முக்கிய ரயில்வே திட்டங்களை மீண்டும் தொடங்கத் தேவையான அறிவுரைகளை ரயில்வே அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுமட்டுமின்றி, தமிழகத்தின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப, கூடுதல் புதிய ரயில் திட்டங்களை அனுமதித்திடவும் பிரதமர் தலையிட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

“தமிழகத்தின் ரயில்வே திட்டங்களை விரைவாக நிறைவேற்றத் தேவையான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து ஒத்துழைப்புகளையும் தமிழ்நாடு அரசு முழுமையாக வழங்கும்” என உறுதியளித்துள்ள முதல்வர், மாநிலத்தின் வளர்ச்சித் தேவைகளை ரயில்வே அமைச்சகம் பரிசீலிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பட்ஜெட்டுக்குப் பிந்தைய இந்த நகர்வு, தமிழகத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram