பொத்தாம் பொதுவாக நிதி வரவில்லையா!! நீதியற்று நடக்கும் தமிழக முதல்வர்!!

commonly-says-didnt-received-finance-from-central-tamilnadu-cm-truthless

ஜாகர்கண்ட்  கவர்னர் சி பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். தமிழகத்தின் நிதி ஒதுக்கீடு குறித்து அவர் செய்தியாளர்களுக்கு ஏற்ற கேள்விகளுக்கு சரமாரியாக பதில் அளித்துள்ளார். நமக்கு ஒரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒரு நியாயமா என்று நடப்பாச்சி முதல்வரான ஸ்டாலினை கண்டித்துள்ளார்.

அவர் அவ்வாறு செய்வாரா என்று கேள்வியும் எழுப்பி உள்ளார். முதலில் செய்தியாளர்கள் சந்திப்பில், அரசு ஒரு திட்டத்தை ஒதுக்குகிறது என்றால் அது மக்களுக்கானது. மக்களுக்கு முழுவதும் போய் சேர்ந்தால் அது மக்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று எடுத்துரைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். தமிழகத்துக்கு நிதி வழங்கவில்லை என்று பொதுவாக கூறினால், அரசு நிதி எந்தெந்த திட்டங்களுக்கு வழங்கியுள்ளது. எந்தெந்த திட்டங்களுக்கு வழங்கவில்லை என்று கூறியிருந்தால் அது மத்திய அரசு பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும் என்றார்.

நிதி வழங்கவில்லை என்றால் வெள்ளை அறிக்கை தர வேண்டியதுதானே என்று தமிழக அரசை கேள்வி எழுப்பி உள்ளார். உதாரணத்திற்கு தமிழக அரசு மாவட்ட வாரியாக திட்டம் தொடங்கியுள்ளது. அதை ஒரு மாவட்ட கலெக்டர் செயல்படுத்த மாட்டார் என்றால் அவர்கள் அதற்கு நிதி ஒதுக்குவார்களா! இவர்களுக்கு ஒரு நியாயம்! அடுத்தவர்களுக்கு ஒரு நியாயமா! என்று சரமாரியாக பதில் அளித்து சென்றுள்ளார்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram