வெள்ளை மாளிகையில் மீண்டும் ஒரு வாக்குவாதம்!! டிரம்ப்  மற்றும் ராமபோசா இடையே மோதல்!!

Conflict between Trump and Ramaphosa

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது பதவி காலம் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இடமிருந்து அலுவலகத்தில் வருவதற்கான அழைப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் அனைவர் முன்னிலையில் விமர்சிக்கப் படுவதற்கும் மற்றும் அவமானப்படுவதற்கும் போன்ற அபாயங்கள் இருக்கும் என்பது வெளிநாட்டு தலைவர்கள் அறிந்திருக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ராமபோசா வுக்கும் இடையே நடந்த கடும் வாக்குவாதம் சர்ச்சையை கிளப்பியது.

நீண்ட வீடியோ ஒன்றின் திரையிடல், மங்கலான விளக்குகள் மற்றும் செய்தி கட்டுரை குவியல்களுடன் மறைமுகமாக நடத்தப்பட்ட தாக்குதல் இந்த வாக்குவாதத்திற்கு அடிப்படை ஆக அமைந்துள்ளது. நேற்று முன்தினம் (மே 22ஆம் தேதி)வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தொலைக்காட்சி கேமராக்கள் சந்திப்பினை படம் பிடித்துக் கொண்டிருந்தது.

சந்திப்பின் தொடக்கம் அமைதியான உரையாடலில் ஆரம்பித்தது. ஒரு பத்திரிக்கையாளர் டிரம்ப் இடம் இவ்வாறு கேட்டுள்ளார், வெள்ளையர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று குற்றச்சாட்டுகள் தவறானவை என நீங்கள் நம்ப வேண்டும் என்றால் எந்த வகையான ஆதாரங்கள் உங்களுக்கு தேவை என்று கேட்டிருந்தார்.

அதற்கு  தென்னாப்பிரிக்க மக்களின் குரல்களை கேட்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா பதிலளித்தார். தென்னாப்பிரிக்கா அதிபரை தொடர்ந்து பேச ஆரம்பித்த டிரம்ப் உதவியாளரிடம் சில விஷயங்கள் காட்ட வேண்டும் என கூறி விளக்குகளை அனைத்து தொலைக்காட்சியை இயக்குமாறு உத்தரவிட்டார். ட்ரம்பின் ஆலோசகர் எலான் மஸ்க் சோபாவில் அமர்ந்து நடக்கும் நிகழ்வுகளை கவனித்துக் கொண்டிருந்தார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் மற்றும் அசாதாரணமான மற்றும் திட்டமிட்டு நடத்தியது போன்ற தாக்குதல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்னெடுத்து அமெரிக்க அதிபர் தனது பேச்சை ஆரம்பித்தார்.

இனவெறி பாடல் “போயரை சுடு” (shoot The boer) என்ற பாடலை தென் ஆப்பிரிக்க அரசியல் தலைவர்கள் கோஷம் இடுவது போன்ற காட்சிகள் காண்பிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா அதிபர் ராமபோசா அரசியல் உரைகளில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் மற்றும் பயன்படுத்தப்படும் தோனியின் உடன் உடன்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய கூட்டாளியும் ராமபோசா வெள்ளையர்களால் ஆளப்பட்ட ஆட்சிக்கு முடிக்க பேச்சு வார்த்தையாளருமான ராமபோசா கூட்டத்திற்கு தயாராக வந்திருந்தார்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram