கீவ்: ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளாகதொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், போர் நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. இந்த தாக்குதலின் போது ரஷ்யாவின் படைத்தளங்கள் மற்றும் 41 போர் விமானங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
விமான தளங்கள் தகர்க்கப்பட்டதால் விமான சேவை தற்காலிகமாக ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனை ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. நேற்றைய தினம் உக்ரைனின் கீவ் மற்றும் ஒடேசா நகரங்களை ரஷ்யா ராணுவம் தாக்கியது. இதில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், 11 பேர் படுகாயம் அடைந்ததாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று இரவு நடந்த ரஷ்ய தாக்குதலில் உக்ரேனின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கார்கிவ் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடங்கள் ரஷ்ய படையினரால் அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலானது சுமார் 9 நிமிடங்கள் நீடித்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 54 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 17 ட்ரோன்களை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
இதில் 15 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்ததாக கார்கிவ் நகர மேயர் இகோர் தெரகோவ் கூறியுள்ளார். மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளின் இடர்பாடுகளில் சிக்கி பல பேர் இருப்பதாக கூறியுள்ளார். காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மேயர் தெரிவித்துள்ளார். நகரின் முக்கிய இடங்கள் அழிக்கப்பட்டதாக கார்கிவ் மேயர் தெரிவித்தார்.