பெண் ரசிகரின் வேண்டுகோள்!! RCB க்கு கப்!! நமக்கு லீவு!!

Cup for RCB!! We have a day off!!

குவாலியர் முதல் தகுதி சுற்றில் பஞ்சாபி மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள நிலையில், ஒரு பெண் தீவிர ரசிகர், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ஒரு கையெழுத்து கடிதம் எழுதியுள்ளார். அதில், RCB அணி கோப்பையை வென்றால், ஜூன் 3-ஆம் தேதி கர்நாடக முழுவதும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும், அந்த நாளை “RCB ரசிகர்களின் திருநாள்” என ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, RCB ரசிகர்களின் உற்சாகத்தை வெளிப்படுத்துகிறது. RCB அணியின் வெற்றியை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அரசு ஆதரவுடன் கொண்டாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த ரசிகர் கேட்டுள்ளார்.

17 ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் ஒருமுறைகூட கோப்பையை வென்றது இல்லை என்பது வருத்தத்திற்கு உரியது. RCB அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக, ஒரு பெண் ரசிகர், “RCB இறுதிப்போட்டியில் வெல்லவில்லை என்றால், நான் என் கணவரை விவாகரத்து செய்வேன்” என ஒரு பலகையை பிடித்துக் கொண்டு போட்டியை பார்த்தது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. RCB அணி இறுதி கட்டத்திற்கு முன்னேறியது இது நான்காவது முறை.

இந்த முறையாவது ஐபிஎல் கப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த நிகழ்வுகள், RCB ரசிகர்களின் உணர்வுகள் மற்றும் அணியின் வெற்றியை எதிர்நோக்கும் உற்சாகத்தை வெளிப்படுத்துகின்றன.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram