மகள் ஓட்டம்.. இரு பேத்திகள் கொலை.. இரு மூதாட்டிகள் தற்கொலை!!

Daughter runs.. Old women commit suicide!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குளிப்பட்டி பகுதியில் அரங்கேறிய கொடூர சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகள் வேறு ஒருவனுடன் சென்றதால் பேத்திகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. சின்ன குளிப்பட்டியை சேர்ந்த பவித்ரா என்பவருக்கு திருமணம் ஆகி லித்திஷ்கா (7), தீப்தி (5) ஆகிய மகள்கள் இருந்த நிலையில் வேறு ஒருவருடன் இருந்த தகாத தொடர்பால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் பவித்ரா.

பவித்ராவுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் தகராறு காரணமாக தனது தாய் வீட்டில் இருந்துள்ளார் பவித்ரா. பள்ளிப்பட்டியை சேர்ந்த பெயிண்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோர் பவித்ராவை கண்டித்து வந்துள்ளனர் பவித்ரா அதனை பொருட்படுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பெயிண்டர் உடன் வீட்டிற்கு தெரியாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவமானமடைந்த பவித்ராவின் தாயார் காளீஸ்வரி மற்றும் அவரது பாட்டி செல்லம்மாள் ஆகியோர் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை நித்திஷ்கா மற்றும் தீப்தி ஆகிய இரு பெண் குழந்தைகளையும் தூக்கில் போட்டு கொலை செய்து விட்டு செல்லம்மாள்(45) மற்றும் அவரது தாயார் காளீஸ்வரி (65) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கங்களில் விசாரித்துள்ளனர்.

மேலும், சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram